tag:blogger.com,1999:blog-34103693.post2166718043282698254..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: பேரினவாதத்தின் போராயுதம்தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-34103693.post-27478058528426278002012-05-27T12:11:08.283-04:002012-05-27T12:11:08.283-04:00//உங்களையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்க...//உங்களையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்களா///<br /><br />இந்தக் கட்டுரையில் அனானிமஸாக வந்து இந்தக் கேள்வியைக் கேட்கும் நல்மனதை நான் புரிந்துகொள்கிறேன்.<br /><br />அடுத்தவாரம், பாலியல் தொழிலாளர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதாக இருக்கிறேன்.<br /><br />அந்தக் கட்டுரையில் வந்து 'உங்களது ரேட் என்ன?'என்று கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.<br /><br />குரோதத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-42511156772646708912012-05-27T12:07:56.361-04:002012-05-27T12:07:56.361-04:00///இன்னுமா இங்கே பின்னூட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கின...///இன்னுமா இங்கே பின்னூட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன?//<br /><br />ஆம்.. ராஜ நடராஜன்:))<br /><br />//புலி புலியென்று இன்னும் கிலியாகிறவர்களின் மொத்த உருவகப்படுத்தல் என்னவென்று எங்கு நோக்கினாலும் விடுதலைப்புலிகளின் மீதான எதிர் விமர்சனங்களின்றி விமர்சிப்புக்கள் என்னவென்று அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.<br /><br />ஒரு போராட்டத்தின் நெளிவு,சுளிவுகளில் தவறுகள் இருக்கலாம்.ஆனால் தவறுகளே சரியாகி விடுவதில்லை.முள்ளிவாய்க்காலுக்குஅப்பாலான மூன்றாண்டு கால இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து நோக்கினால் விடுதலைப்புலிகள் மீதான தவறுகளும் கூட பின் தள்ளிவிடப்படும் சூழல்தான் உருவாகியுள்ளது.///<br /><br />நீங்கள் மேலே சொல்லியிருப்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. அண்மையில் கனடாவுக்கு வந்திருந்த விமர்சகரும் எழுத்தாளருமாகிய யமுனா ராஜேந்திரன் புலியெதிர்ப்பாளர்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதே. அவர்களிடமிருந்து அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை.<br /><br />///இது போலவே புலி விமர்சனங்களும் காலப் போக்கில் அமிழ்ந்து போகும்.புலி விமர்சனம் என கொட்டிய வார்த்தைகளை இன்னும் சில வருடங்கள் கழித்து மீட்பு ஆராய்வு செய்வோமாக///<br /><br />விமர்சனம் என்பது சரி, பிழை இரண்டையும் குறித்து ஆராய்ந்து முன்வைக்கப்படுவது. மேற்குறித்தவர்கள் அள்ளித் தெளிப்பதெல்லாம் அவதூறுகளே. பார்க்கலாம்... காலம் யாவற்றுக்கும் பதலளிக்கும். நேரம் எடுத்துக்கொண்டு உரையாடியமைக்கு நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-3446237725129036162012-05-22T05:47:14.045-04:002012-05-22T05:47:14.045-04:00உங்களையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்களா...உங்களையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்களாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-80439116934156791152012-05-22T04:38:21.405-04:002012-05-22T04:38:21.405-04:00இன்னுமா இங்கே பின்னூட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன...இன்னுமா இங்கே பின்னூட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.<br /><br />புலி புலியென்று இன்னும் கிலியாகிறவர்களின் மொத்த உருவகப்படுத்தல் என்னவென்று எங்கு நோக்கினாலும் விடுதலைப்புலிகளின் மீதான எதிர் விமர்சனங்களின்றி விமர்சிப்புக்கள் என்னவென்று அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.<br /><br />ஒரு போராட்டத்தின் நெளிவு,சுளிவுகளில் தவறுகள் இருக்கலாம்.ஆனால் தவறுகளே சரியாகி விடுவதில்லை.முள்ளிவாய்க்காலுக்குஅப்பாலான மூன்றாண்டு கால இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து நோக்கினால் விடுதலைப்புலிகள் மீதான தவறுகளும் கூட பின் தள்ளிவிடப்படும் சூழல்தான் உருவாகியுள்ளது.<br /><br />தமிழர்கள் அனைவருமே புலிகள் என்று இலங்கை அரசு பீடம் சொல்வதில் கூட பொருள் இருக்கிறது.ஆனால் புலி,பாசிஸம் இன்னும் பல சொற்பாவனைகள் எங்கேயிருந்து தமிழர்களிடம் பிறக்கின்றன?<br />ஈழச்சகோதரர்கள் இன்னும் ஒருவர் மீது ஒருவர் ஏன் இன்னும் விமர்சனம் கொள்கிறார்கள் என்பது இன்னும் கூட எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.<br /><br />2004ம் ஆண்டு கால கட்ட கருணாவின் கிழக்கு,வடக்கு பிராந்திய பிரிவினை பற்றியும் ஆன்டன் பாலசிங்கம் பிரபாகரன் சார்ந்த 25 வருட அனுபவ பகிர்வில் வடக்கு தலைமைக்கு நிகரான பதவியையே கருணாவுக்கு தரப்பட்டது என்பது பற்றி வாசிக்க நேர்ந்தது.தொடர் நிகழ்வுகளும்,தற்போதைய கருணாவின் நிலையும் கூட உண்மைகளை உரக்க சொல்கின்றனவே!இது போலவே புலி விமர்சனங்களும் காலப் போக்கில் அமிழ்ந்து போகும்.புலி விமர்சனம் என கொட்டிய வார்த்தைகளை இன்னும் சில வருடங்கள் கழித்து மீட்பு ஆராய்வு செய்வோமாக.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-52381814062291682892012-05-18T00:36:37.633-04:002012-05-18T00:36:37.633-04:00அனானி,
///"ஒருவருடைய தலையில் ஓங்கி அடிக்கப்ப...அனானி,<br /><br />///"ஒருவருடைய தலையில் ஓங்கி அடிக்கப்படும் அரக்கு முத்திரையை எப்போது நீக்குவார்கள்?"என்று.///புலிகள் எல்லோர்மீதும் 'துரோகி' முத்திரை குத்தினார்களே அதைத்தானே சொல்கிறீர்கள்...?///<br /><br />இந்தக் கேள்வியையாவது உங்கள் சொந்தப் பெயரில் வந்து கேட்டிருக்கலாம்.<br /><br />இதற்குப் பதில் சொல்வதன் முன் ஒன்று... நான் விடுதலைப் புலிகளை நேசிக்கிறேன். எந்தளவு நேசிக்கிறேன் என்றால்.... அவர்களது அர்ப்பணிப்பை நினைத்த மாத்திரத்தில் விழிகளில் நீர் திரண்டுமளவிற்கு அவர்களை நேசிக்கிறேன்; விமர்சனங்களோடு.<br /><br />முள்ளிவாய்க்கால் துயரத்தை மட்டும் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கவில்லை. பல படிப்பினைகளையும் தந்து சென்றிருக்கிறது. தியாகி-துரோகி என்று அடையாளப்படுத்தும் குறுந்தேசியவாதத்திலிருந்து பெரும்பாலானோர் விலகிவந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன். எங்களுக்கு வேண்டியிருப்பது எங்கள் மக்கள் பாதுகாப்பாக, சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழக்கூடிய ஒரு நிலைமை. தியாகி-துரோகி முத்திரை குத்தல்கள் அல்ல. <br /><br />மேலும், நீங்கள் சொல்வதுபோல, விடுதலைப் புலிகள் எல்லோரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தவில்லை. <br /><br />அனானிமஸாக வந்து தடாலடியாகக் கேள்வி கேட்பவர்களுக்கு மிக அவசியம் ஏற்பட்டாலன்றிப் பதிலளிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பதில் சொல்லத் தெரியாமலில்லை. நேர விரயம். நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15229239112386905552012-05-17T22:40:31.349-04:002012-05-17T22:40:31.349-04:00///"ஒருவருடைய தலையில் ஓங்கி அடிக்கப்படும் அரக...///"ஒருவருடைய தலையில் ஓங்கி அடிக்கப்படும் அரக்கு முத்திரையை எப்போது நீக்குவார்கள்?"என்று.///புலிகள் எல்லோர்மீதும் 'துரோகி' முத்திரை குத்தினார்களே அதைத்தானே சொல்கிறீர்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-88008497135735226652012-05-17T13:12:56.821-04:002012-05-17T13:12:56.821-04:00அழிக்கப்பட்ட பின்னூட்டம்.... மீண்டும்...
இவ்வளவு...அழிக்கப்பட்ட பின்னூட்டம்.... மீண்டும்...<br /><br /><br />இவ்வளவு நாளும் வெறும் பார்வையாளனாக இருந்து விட்டு இப்போத்தான் இணையத்துள் வந்திருக்கிறேன் தமிழ்நதி. தன் விபரத்தில் இன்று தான் சில செய்திகளை ஏற்றம் செய்திருக்கிறேன். என் கூகிள் முகவரி தற்போது காணக்கிடைக்கும். இன்னும் நிறைய எழுதுங்கள். எல்லாம் நல்லவைக்கே.<br /><br />-நல்லதோர் வீணைதமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-22328505858158988282012-05-17T13:11:08.270-04:002012-05-17T13:11:08.270-04:00நலமா 'நல்லதோர் வீணை'?
இணையத்தில் காணக் கி...நலமா 'நல்லதோர் வீணை'?<br /><br />இணையத்தில் காணக் கிடைப்பதில்லை உங்களை.<br /><br />///இதிலும் புலி வாலை தேடி பிடிப்பவர்கள் பிடித்துக் கொள்ளட்டும்.<br />அவர்களால் புலி வாலை விட முடியாது.///<br /><br />புலி வாலை விட்டால் அவர்கள் அரசியல் செய்வது எப்படியாம்...:))))தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-27272678675668720392012-05-17T13:10:19.350-04:002012-05-17T13:10:19.350-04:00முன்பே சொன்னபடி, சில பின்னூட்டங்களைத் தவறுதலாக அழி...முன்பே சொன்னபடி, சில பின்னூட்டங்களைத் தவறுதலாக அழித்துவிட்டேன். அவற்றை மீண்டும் பதிகிறேன்.<br /><br />நல்லதோர் வீணையின் பின்னூட்டம்...<br /><br /><br />பேரினவாத அரச படைகளால் தமிழ்ப் பெண்கள் சிதைக்கப்பட்டார்கள் என்பதை உலகத்திற்கு அறியத் தருவதானது உங்களை எந்த வகையில் தொந்தரவு செய்கிறது? அதைப் பற்றி எழுதாமல், பேசாமல் மௌனம் காத்து இலங்கை அரசுக்கு 'புனித'ப் பட்டம் வாங்கித் தரவேண்டுமென்கிறீர்களா? ஒரு இனத்தின் அழிவைப் பற்றி, அந்த இனத்தின் மீது பேரினவாதிகளால் ஏவிவிடப்பட்ட கொடூரங்களைப் பற்றி நாங்கள் எழுதத்தான் செய்வோம். இதில் பிரச்சாரம் ஒன்றுமில்லை.<br /><br />ஊதுகுழல்களாகிய உங்களுக்கே இவ்விடயங்களில் மௌனம் சாத்தியம். எங்களுக்கில்லை.<br /><br />சரியாகசொன்னீர்கள்! அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. இந்தக் கட்டுரை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட எல்லாப் பெண்களுக்காகவுந்தான் பேசுகிறது. இதிலும் புலி வாலை தேடி பிடிப்பவர்கள் பிடித்துக் கொல்லட்டும்.<br />அவர்களால் புலி வாலை விட முடியாது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-22198697211560151222012-05-17T13:06:58.254-04:002012-05-17T13:06:58.254-04:00belono,
"தமிழ்நதி யார் என்பது எனக்குத் தெரி...belono, <br /><br />"தமிழ்நதி யார் என்பது எனக்குத் தெரியாது"என்று முதலில் சொல்கிறீர்கள். பிறகு, <br /><br />"தமிழ்நதி என்பவர் கனடாவில் இருந்தவர். தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் புலிகளின் பிரசார பீரங்கியாக செயல்படுபவர் என்பதே கனடா நண்பர்கள் மூலம் நான் அறிந்தது."<br /><br />என்றும் சொல்கிறீர்கள். ஏதோவொரு வகையில், உங்கள் நண்பர்களின் வார்த்தைகளில் சொல்வதானால், ' 'புலிகளின் பிரச்சாரப் பீரங்கி'யாகவாவது என்னை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால், அனாமதேயமாக வருகிறவர்களுக்கு எந்தவித அடையாளமும் அறிமுகமும் இல்லை. தாங்கள் சொல்ல வரும் கருத்தில் அவர்களுக்கே முழு நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் அனாமதேயமாக வருகிறார்கள்.<br /><br />என்னைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கியாகச் சித்தரிக்கும் கனடா வாழ் புத்திசாலிகள் யாரென்பதை நான் ஓரளவு அறிவேன். அவர்களுக்கு தங்களது புலியெதிர்ப்பு அரசியலை மேற்கொண்டு நகர்த்துவதற்கு என்னைப்போன்ற ஆட்கள் தேவை. புலிகள் அரங்கத்திலிருந்து அகற்றப்பட்டான பிறகு, தங்கள் அரசியலை எப்படி நகர்த்துவதென்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்கள். ஆகவே, புலிகளது 'பிரச்சாரப் பீரங்கி'யாகத் தொழிற்படும் (மிகப்பெரிய நகைச்சுவை) என்னைப் போன்றவர்களைத் திட்டித் தீர்த்துக்கொள்வதன் மூலமாவது தங்கள் இருப்பை நிறுவ முயல்கிறார்கள். நேற்றைய கூட்டத்தில் யமுனா ர◌ாஜேந்திரன் சொன்னதுபோல, "மாற்று அரசியல் மாற்று அரசியல் என்கிறீர்களே... மாற்று அரசியல் என்பது புலிகளுக்கெதிராகப் பேசுவது மட்டுமல்ல; புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட கடந்த மூன்றாண்டு காலத்தில் என்ன மாற்று அரசியலை முன்வைத்தீர்கள்?"என்பதுவே நாங்கள் கேட்பதும். ஒலிவாங்கியின் முன் நின்று புலிகளைத் திட்டித் தீர்ப்பது மட்டுமே இதுவரை காலமும் அவர்களது அரசியலாக இருந்துவந்திருக்கிறது. இனியாவது புதிதாக, ஆக்கபூர்வமாக ஏதாவது கதைக்கச் சொல்லுங்கள். <br /><br />//புலிகளின் யுத்த வெறியால் பாதிக்கபட்ட பெண்களை புலிகளின் பிரசாரத்திற்காக பயன்படுத்துவது மிக வருத்தமானது.// இந்த வார்த்தைகளின் பொருளுணர்ந்துதான் சொல்கிறீர்களா...? ஆக, மேற்குறிப்பிடப்பட்ட பெண்கள் எல்லாம் இலங்கை அரசின் படைகளால் பாதிக்கப்படவில்லை; இவர்களெல்ல◌ாம் புலிகள் போராடப் புறப்பட்ட காரணத்தால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்கள். 1956, 1958, 1971 என்று பட்டியலிடப்படும் காலப்பகுதிகளில் புலிகள் இருந்தார்களா? அப்போதும் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு யாரைக் காரணமாகச் சொல்வீர்கள்?<br /><br />புலிகளும் மற்ற இயக்கங்களும் போராடப் போனது யுத்தவெறியினால் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். வரலாறு என்று ஒன்று இருக்கிறது. அது, நீங்கள் சொல்வதுபோல, புலிகளின் 'பிரச்சாரப் பீரங்கி'கள◌ால் முற்றிலுமாக எழுதப்பட்டதன்று.<br /><br />பேரினவாதிகளால் சிறுபான்மை இன மக்கள் மீது தொடுக்கப்பட்ட அத்தனை அடக்குமுறைகளையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்திருக்க வேண்டுமென்கிறீர்களா? நல்லது.<br /><br />தனிப்பட்ட கதைகள் எங்களிடமும் உண்டு. குடல் கிழிந்து தொங்கிய, வீரச்சாவடைந்த போராளிகள் எங்கள் பக்கத்திலும் உண்டு.. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படவில்லையெனினும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் எங்கள் பக்கத்திலும் உண்டு. இன்னும் குறிப்பாகச் சொல்லலாம். ஆனால், தனிப்பட்ட விடயங்களைச் சொல்லி அனுதாபம் தேடவேண்டிய அவசியம் இங்கில்லை. நாங்கள் அவற்றை நீங்கள் சொன்னதுபோல வெளியில் சொல்வதில்லை. போர◌ாட்டம் எல்லோரையுந்த◌ான் பாதித்தது. எல்லோரும் 'யுத்தவெறியினால் பாதிக்கப்பட்டோம்'என்று சொல்வதில்லை. இனவிடுதலைக்கான போர◌ாட்டத்தை முன்னெடுத்தவர்கள் என்றவகையில், சிறுபான்மைத் தமிழர்கள் என்றவகையில் அவற்றை அவற்றைத் தாங்கிக்கொண்டிருக்கிறோம்.<br /><br />உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள்.... "ஒருவருடைய தலையில் ஓங்கி அடிக்கப்படும் அரக்கு முத்திரையை எப்போது நீக்குவார்கள்?"என்று. அதனடிப்படையில், எங்களால் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களையும் கறுப்பும் மஞ்சளும் நீண்ட வாலுமுடைய 'புலிக் கருத்தாக' குறுக்கும் அரசியலிலிருந்து எப்போது வெளிவருவார்கள் என்று கேளுங்கள். நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-84013963463827624512012-05-17T13:05:46.072-04:002012-05-17T13:05:46.072-04:00comment moderation இல் சில பின்னூட்டங்கள் அழிந்துப...comment moderation இல் சில பின்னூட்டங்கள் அழிந்துபோய்விட்டன. அவற்றை மீண்டும் பதிகிறேன்.<br /><br />belono என்பவரின் பின்னூட்டம்....<br /><br />//தமிழ்நதி என்ற பெயரில் நான் எழுதினாலும் நான் யார் என்பதை எல்லோரும் அறிவார்கள். உதாரணமாக மனுஷ்யபுத்திரன் என்ற பெயரில் ஹமீத் எழுதுகிறார். அதற்காக அது அவர் எழுதியது இல்லை என்று ஆகிவிடுமா?// <br /><br />இந்த பதில் அனாமதேயம் ஒருவருக்கு நீங்கள் கூறியது. ஆனால் தமிழ்நதி யார் என்பது எனக்கு தெரியாது. தமிழ்நதி என்பவர் கனடாவில் இருந்தவர். தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் புலிகளின் பிரசார பீரங்கியாக செயல்படுபவர் என்பதே கனடா நண்பர்கள் மூலம் நான் அறிந்தது. அனாமதேயம் ஒருவருக்கு நீங்கள் அளித்த பதிலுக்காக மட்டுமே இதை தெரிவித்தேன். <br />உங்களது பதிவில் யாரை அனுமதிப்பது என்பது உங்களது உரிமை. <br />உங்களது புலிகளால் பலவந்தமாக பிடித்து செல்லபட்ட எனது உறவினர்(பெண்)மிக பெரிய அதிஷ்டம் இருந்ததினால் புலிகளிடம் இருந்து தப்பி வந்து இன்று மேற் கல்வி கற்று கொண்டிருக்கிறார். நீங்கள் புலிகளின் யுத்த வெறியால் பாதிக்கபட்ட பெண்களை புலிகளின் பிரசாரத்திற்காக பயன்படுத்துவது மிக வருத்தமானது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-84498429352838592722012-05-11T13:04:36.234-04:002012-05-11T13:04:36.234-04:00ராஜ நடராஜன்
///அனாமதேயமாகவோ அல்லது பெயர்ச்சொல்லுட...ராஜ நடராஜன்<br /><br />///அனாமதேயமாகவோ அல்லது பெயர்ச்சொல்லுடனோ வந்தாலும் அவர்கள் கருத்து நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் பெயர் ஒரு பொருட்டல்ல என்றே நினைக்கின்றேன்.///<br /><br />ஆம்..அனாமதேயமாக வருபவர்கள் நியாயத்தோடு பேசும்போது அதைக் கருத்திற் கொள்ளவே வேண்டும். இந்தக் கட்டுரையை எடுத்துப் பாருங்கள்... "இலங்கையின் அரச படைகள் சிறுபான்மையினத் தமிழ்ப்பெண்களை வன்புணர்ந்தார்கள்...உளவியல் சிக்கலுக்கு உட்படுத்தினார்கள். போர்க்குற்றம் இன்னபிற பற்றியெல்லாம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், பேரினவாதிகளால் இழைக்கப்பட்ட அநீதியை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்."என்பதே என்னால் முன்வைக்கப்பட்டது. இதில் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது. ஆக, இதை அவர்கள் எப்படி எடுக்கிறார்களென்றால், இலங்கை அரசுக்கு எதிராக எழுதப்படுவனவெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் என்று எடுக்கிறார்கள். இங்கு விடுதலைப் புலிகளைப் பற்றி யார் கதைத்தது? சாதாரண மக்கள் அதிகாரங்களால் எப்படிச் சிதைக்கப்படுகிறார்கள் என்பதுதானே கட்டுரையின் சாராம்சம். அது அவர்களது கண்ணுக்குப் புலப்பட முடியாதபடிக்கு அரச ஆதரவாளர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றுதானே பொருள்.<br /><br />வாதங்களல்ல; நியாயங்கள்தான் நானும் வேண்டுவது.<br /><br />///எதிர்காலம் ஈழத்தமிழர்களுக்கு எந்த முடிவை வைத்துள்ளதை என்பதை ஐ.நாவின் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே தீர்வாக இருக்க முடியும்.அதனை நோக்கி தமிழர்கள் பயணிப்பது நல்லது.///<br /><br />என்னதான் முயன்றாலும் அதற்கான சாத்தியம் குறைவு நண்பரே. பிராந்திய வல்லாதிக்கங்கள் அதற்கு இடமளிக்க மாட்டா.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-24936862658716537132012-05-11T07:06:45.238-04:002012-05-11T07:06:45.238-04:00தமிழ் நதி!தமிழ்மணத்தின் ஈழப்பகுதியை பார்வையிட வரும...தமிழ் நதி!தமிழ்மணத்தின் ஈழப்பகுதியை பார்வையிட வரும்போது உங்கள் பதிவு மீண்டும் நினைவு வந்தது.<br /><br />முதலாவதாக அனாமதேயமாக வருபவர்களுக்கு இருவிதமான காரணங்கள் இருக்கும்.ஒன்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாதென்ற முன்னெச்சரிக்கை.இன்ன்மொன்று ஈழ உணர்வாளர்களை விமர்சிக்கவோ அல்லது வசைபாடுவதற்குள்ள வசதி.<br /><br />இன்னுமொரு பார்வையாக சுய பெயர் மாதிரி தெரியும் ஜேம்ஸ் ஆனந்த் போன்றவர்கள் பொது விமர்சனவாதிகளா என்றால் இல்லை.ஜேம்ஸ் ஆனந்த் ஈழ சார்புக்கு எதிரான நிலை அல்லது ராஜபக்சே முகாமிலிருந்து விமர்சிக்கும் நண்பராகவே இருக்கிறார்.<br /><br />அனாமதேயமாகவோ அல்லது பெயர்ச்சொல்லுடனோ வந்தாலும் அவர்கள் கருத்து நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் பெயர் ஒரு பொருட்டல்ல என்றே நினைக்கின்றேன்.நமக்கு எதிரான நிலைப்பாட்டில் கருத்துக்கள் வெளியிட்டாலும் கூட அவர்களது வாதங்களை வெற்றி கொள்ள நமக்கு நியாயமான காரணங்கள் நிறைய இருக்கின்றன.எப்படி தர்க்கம் செய்து நமது வாதத்தை முன்னிறுத்துகிறோம் என்பது முக்கியம்.<br /><br />தற்போதைய சூழலில் இந்தியாவின் 13,ஈழத்தை பின் தள்ளும் ஒற்றை இலங்கை,ஈழம் தமிழகத்திலும்,புலம் பெயர் தேசங்களிலும் ஈனஸ்வரத்தில் முனங்குவதாக ஏற்படுத்தும் பிம்பம் இவற்றில் மக்களின் உணர்வுகள் என்ன என்பது மட்டும் உறங்கியே கிடக்கின்றன.<br /><br />எதிர்காலம் ஈழத்தமிழர்களுக்கு எந்த முடிவை வைத்துள்ளதை என்பதை ஐ.நாவின் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே தீர்வாக இருக்க முடியும்.அதனை நோக்கி தமிழர்கள் பயணிப்பது நல்லது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44670713531517513912012-05-10T13:33:29.162-04:002012-05-10T13:33:29.162-04:00நன்றி வாணி. 'தமிழ்ப்பெண்களை வன்கொடுமை செய்தார...நன்றி வாணி. 'தமிழ்ப்பெண்களை வன்கொடுமை செய்தார்கள்'என்ற உண்மையை யார் வேண்டுமானாலும் பேசவும் எழுதவும் உரிமை உண்டல்லவா? விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு அந்த உரிமை இல்லை என்பது, எந்தவகை நியாயத்தில் சேர்த்தி என்று தெரியவில்லை. அரசுக்கு எதிராக எழுதுவதென்பது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது என்ற சமன்பாட்டை அவர்களாகவே வந்தடைந்து அதனடிப்படையில் பேசுகிறார்கள்.<br /> <br />///There are people like that who would defend the Sri-Lankan government at cost.//<br /><br />yes!!!<br /><br />நன்றி சின்னப்பயல். விரைந்து வரவேண்டும் விடியல்.... அதட்டும் அதிகாரங்கள் இன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-90429649024642965442012-05-10T12:46:33.174-04:002012-05-10T12:46:33.174-04:00"'அரச படைகள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள..."'அரச படைகள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்'என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ஏன் பற்றிக்கொண்டு வருகிறது என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது."<br /><br />You have said it right. But no need to be surprised. There are people like that who would defend the Sri-Lankan government at cost.Vaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-89161259962618654202012-05-10T12:42:41.512-04:002012-05-10T12:42:41.512-04:00Talking about sexual abuse and HR violaiton by the...Talking about sexual abuse and HR violaiton by the Sri-Lankan government forces is hurting few readers. It is not hard to guess what kind of people they are. Let them defend the perpetrator while we all have the responsibility and duty to fight the murderers.Vaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-51479104436998797552012-05-10T11:52:14.409-04:002012-05-10T11:52:14.409-04:00எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையில் நகர்கிறது நாட்க...எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையில் நகர்கிறது நாட்கள்.விடியட்டும் விரைவில்...சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-69428139131075810782012-05-09T12:21:48.123-04:002012-05-09T12:21:48.123-04:00///புலி ஆதரவாளர்களுக்கு இதை எல்லாம் சொல்ல அருகதை இ...///புலி ஆதரவாளர்களுக்கு இதை எல்லாம் சொல்ல அருகதை இருக்கிறதா? துரோகிகள் என சொல்லி அரை வாசி தமிழர்களை கொடுமையாக கொலை செய்த புலிகள் மனித உரிமைக்கு வக்காலத்து வாங்குவது கேலிக்குரியது.///<br /><br />வருக ஜேம்ஸ் ஆனந்தன்...:))<br /><br />ஆக நீங்கள் என்னை 'புலிகள்'என்றே அழைக்கிறீர்கள். நல்லது!<br /><br />'நீ புலி வால்'என்று ஒரு அரக்கு முத்திரையை என் தலையில் ஓங்கிக் குத்திவிடுவீர்கள். அதன்பிறகு நான் வாயைத் திறக்கக்கூடாது. புலி ஆதரவாளராக இருக்கும் ஒருவர் மனிதவுரிமை மீறல்களைப் பற்றிக் கதைக்கக்கூடாதா? அரச ஆதரவாளர◌ாக இருக்கும் ஒருவருக்குக் கூட மனிதவுரிமை மீறல்களைப் பற்றிக் கதைக்க உரிமை இருக்கிறது. அது அவதூறாக இல்லாமல் நியாயமாக இருக்கும் பட்சத்தில்.... மாபெரும் அவலமாகிய இனப்படுகொலையை நடத்தி முடித்த ஒரு அரச தரப்பினருக்கே மனிதவுரிமை மீறல்களைப் பற்றிக் கதைக்க உரிமை இருக்கிறதென்றால், பாதிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த எனக்கு, அதனிலும் அதிகமுண்டு.<br /><br />விடுதலைப் புலிகள் மீது கூட எங்களைப் போன்றவர்களுக்கு விமர்சனம் இருக்கிறது. அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் ஒன்றும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. விடுதலைப் புலிகள் தவறுகளை இழைத்தார்கள் என்பதற்காக, அவர்களது தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் ஒன்றுமேயில்லை என்று சொல்லிவிட முடியுமா? அப்படிச் சொல்லும் தகுதி உங்களுக்கோ எனக்கோ இல்லை.<br /><br />'அரச படைகள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்'என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ஏன் பற்றிக்கொண்டு வருகிறது என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64993235446860133362012-05-09T12:11:24.492-04:002012-05-09T12:11:24.492-04:00கருத்துக்கு நன்றி ராஜநடராஜன்,
நமக்கிடையிலான ஒற்று...கருத்துக்கு நன்றி ராஜநடராஜன்,<br /><br />நமக்கிடையிலான ஒற்றுமையின்மையே பல சிக்கல்கள் தீர்க்கப்படாமலிருப்பதற்கான காரணம் என்பதை பல தரப்பினரும் உணர்ந்திருக்கின்றனர். ஆனாலும், தத்தம் குரல்கள் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்கிற காரணத்தால் egoவினால் தொடர்ந்து சர்ச்சைப்பட்டவாறிருக்கின்றனர்.<br /><br />'அத்தி பூப்பதாக இல்லாமல்'நிறைய எழுதவே எண்ணுகிறேன். ஆனாலும், நடைமுறை வாழ்வு விடுவதாயில்லை.<br /><br />--<br />நன்றி தீபிகா,<br /><br />உண்மைகளை வெளிக்கொணர்வதை நீங்கள் வரலாற்றுச் சாட்சியம் என்கிறீர்கள். சிலரோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் என்கிறார்கள். பேரினவாத அரச படைகளால் சிறுபான்மையினராகிய தமிழ்ப்பெண்கள் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்முறையைக் குறித்து எழுதுவதானது எவ்வகையில் பிரச்சாரமாகும் என்பது எனக்குப் புரியவில்லை.<br /><br />----<br />வருகைக்கும் முழுமையாக (நீண்ட கட்டுரையாதலால்) வாசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி வேர்கள்.<br /><br />---<br />ஊகித்து என்ன செய்ய போகிறீர்கள்?கருத்தை சொல்ல வருபவன் மேல் நீ திராணியற்றவன் என்று சொல்லி கருத்து எழுதுபவன் மேல் எழுத்து வன்முறையை நீங்கள் தூண்டிகிறீர்கள்!!///<br /><br />நீங்கள் சொல்ல வரும் கருத்து சரியானதென நம்பினால் ஏன் அனாமதேயமாக வருகிறீர்கள்? உங்களுக்கே நீங்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை, தவறான கருத்தைச் சொல்கிறீர்கள் என்று உணர்ந்திருப்பதனால்தானே அனாமதேயமாக வருகிறீர்கள்? <br /><br />அதில் இரண்டு வசதிகள் இருக்கின்றன... 1.உங்களது எதிரியாகிய என்மீது போகிற போக்கில் சேற்றை வாரியிறைப்பது. அதை வாசகர்களில் சிலர் எடுத்துக்கொள்வார்கள்.<br /><br />2.சொந்தப் பெயரில் வந்து எழுதினால், உங்கள் கருத்து தவறாக இனங்காணப்படும் பட்சத்தில், ஏனையோரதும் கோபத்துக்கு ஆளாவீர்கள். 'அது இப்படித்தான் கதைக்கும்'என்றொரு பெயர் வந்து சேரும். அதனால்தான் அனாமதேயமாக வந்து கருத்து இடுகிறீர்கள்.<br /><br />//இணையத்தில் எல்லாரும் அனாமதேயமே. நீங்கள் நான் எல்லாரும். தமிழ்நதி என்பது உங்கள் சொந்த பெயரா? புனை பெயர்தானே.!!///<br /><br />உங்கள் முட்டாள்தனத்தை அடிக்கடி நிரூபிக்காதீர்கள். தமிழ்நதி என்ற பெயரில் நான் எழுதினாலும் நான் யார் என்பதை எல்லோரும் அறிவார்கள். உதாரணமாக மனுஷ்யபுத்திரன் என்ற பெயரில் ஹமீத் எழுதுகிறார். அதற்காக அது அவர் எழுதியது இல்லை என்று ஆகிவிடுமா?<br /><br />//பாலியல் வன்கொடுமையை புலி பிராசகரர்கள் தங்களில் பிராசார ஆயுதமாக தான் வெகு காலமாய் பாவித்து வருகிறார்கள். அந்த பெண்ணை படத்தை போட்டு அசிங்கமாக எழுதி இணையத்தில் ஆதரவு தேடுவது இன்று நேற்றல்ல பல காலமாக நடந்து வருகிறது.//<br /><br />இலங்கை அரசாங்கத்தின் வன்முறைகளைப் பற்றி எழுதினால், எழுதுபவர்களை புலிப் பிரச்சாரகர்கள் என்று முத்திரை குத்துவது புலியெதிர்ப்பாளர்களின் வழக்கம். பாலியல் வன்கொடுமை செய்தவனைத் தட்டிக் கேட்காமல், அதைப் பற்றி எழுதுபவர்களைத் தட்டிக் கேட்பது ஊதுகுழல்களின் வழமை. இனி உங்கள் கருத்தைக் கணக்கிலெடுப்பத◌ாக இல்லை.<br /><br />//இதனால் தானோ என்னவோ நீங்கள் இப்படி வருந்து எழுதினாலும் கேட்பார் யாரும் இல்லாமல் போகிறது.///<br /><br />வயிற்றெரிச்சல்... காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் தமிழில் வார்த்தைகள் உள்ளன. அதற்கு நீங்கள் மிகச் சரியான உதாரணமாவீர்கள். ஐயோ பாவம்!!!தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15859829144437998152012-05-09T09:45:27.992-04:002012-05-09T09:45:27.992-04:00புலி ஆதரவாளர்களுக்கு இதை எல்லாம் சொல்ல அருகதை இருக...புலி ஆதரவாளர்களுக்கு இதை எல்லாம் சொல்ல அருகதை இருக்கிறதா? துரோகிகள் என சொல்லி அரை வாசி தமிழர்களை கொடுமையாக கொலை செய்த புலிகள் மனித உரிமைக்கு வக்காலத்து வாங்குவது கேலிக்குரியது.James Anandhttps://www.blogger.com/profile/00306912492716511944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1983983377525694722012-05-09T09:36:22.800-04:002012-05-09T09:36:22.800-04:00//சொந்தப் பெயரில் வந்து கருத்துச் சொல்லத் திராணியற...//சொந்தப் பெயரில் வந்து கருத்துச் சொல்லத் திராணியற்றது ஒன்று வந்து கதைத்திருக்கிறது. அது யாரென்பதையும் என்னால் ஊகிக்க முடிகிறது.//<br /><br />ஊகித்து என்ன செய்ய போகிறீர்கள்?கருத்தை சொல்ல வருபவன் மேல் நீ திராணியற்றவன் என்று சொல்லி கருத்து எழுதுபவன் மேல் எழுத்து வன்முறையை நீங்கள் தூண்டிகிறீர்கள்!!<br /><br />இணையத்தில் எல்லாரும் அனாமதேயமே. நீங்கள் நான் எல்லாரும். தமிழ்நதி என்பது உங்கள் சொந்த பெயரா? புனை பெயர்தானே.!!<br /><br />முதலில் எழுத்து வன்முறையை கைவிடுங்கள், பின் உங்கள் பக்க நியாயங்களை பார்க்கலாம்.<br /><br />பாலியல் வன்கொடுமையை புலி பிராசகரர்கள் தங்களில் பிராசார ஆயுதமாக தான் வெகு காலமாய் பாவித்து வருகிறார்கள். அந்த பெண்ணை படத்தை போட்டு அசிங்கமாக எழுதி இணையத்தில் ஆதரவு தேடுவது இன்று நேற்றல்ல பல காலமாக நடந்து வருகிறது.<br /><br />நியாயம் கேட்க்க வேண்டிய செயலை பிராசரம் செய்ய முனைந்தால் என்ன ஆகும்?<br />இதனால் தானோ என்னவோ நீங்கள் இப்படி வருந்து எழுதினாலும் கேட்பார் யாரும் இல்லாமல் போகிறது.<br /><br /><br /><br /><br /><br />சரி உங்கள் சொல்படியே பAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-83181318643669740352012-05-09T04:46:55.604-04:002012-05-09T04:46:55.604-04:00இந்த கட்டுரை மனதில் எழுப்பிய பாதிப்பை எழுத்தில் எழ...இந்த கட்டுரை மனதில் எழுப்பிய பாதிப்பை எழுத்தில் எழுத எனக்கு திறமையில்லை ஆகையால் மெளனமாக கடந்துவிட்டேன் <br /> //ஊதுகுழல்களாகிய உங்களுக்கே இவ்விடயங்களில் மௌனம் சாத்தியம். எங்களுக்கில்லை. //<br />மிக சரியாக சொன்னீர்கள்...வேர்கள்https://www.blogger.com/profile/15366677729691741421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25351390276733030792012-05-09T04:04:56.440-04:002012-05-09T04:04:56.440-04:00மறுக்க முடியாத மனிதகுலத்துக்கெதிரான வக்கிரங்களின் ...மறுக்க முடியாத மனிதகுலத்துக்கெதிரான வக்கிரங்களின் வரலாற்றுச் சாட்சியாய் இந்த உண்மைகளின் பதிவு மிகமிக முக்கியமானது. மறைக்கப்பட முடியாத இந்த ரணங்களின் வலிகளை மௌனமாக கடந்து செல்ல முடியாது. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அத்தனை சகோதரிகளினதும் அடிமனக் குரலாய் உங்கள் பதிவு அமைந்திருக்கிறது. நன்றி.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-77239816595301728532012-05-09T02:35:51.138-04:002012-05-09T02:35:51.138-04:00தமிழ்நதி!நலமா?
பேனா மூடியிட்டு உறங்கும் போது கோணல...தமிழ்நதி!நலமா?<br /><br />பேனா மூடியிட்டு உறங்கும் போது கோணல் மாணல் எழுத்துக்களும் கொக்கரித்து நடனமாடும்.<br /><br />விமர்சனங்கள் இல்லாத எழுத்தாகவும்,வரலாறுமாக இல்லை ஈழப்பிரச்சினை.விமர்சனங்களை எதிர்கொண்டாலும் ஒன்றிணைந்த குரலாக தனித்தனியே ஒலிப்பதால் ஐ.நாவின் கதவில் போய் முட்டி விட்டு திரும்பி விடுகிறது.<br /><br />சம்பந்தன் சிங்க கொடி தூக்கியதும் கூட பார்த்தாயா!தமிழகத்து தலைவர்கள் எவ்வளவு தூரம் யதார்த்தத்துக்கு எவ்வளவு தூரம் அப்பால் நிற்கிறார்கள் என்று இந்திய ஒற்றைக்கண் விமர்சனம் எழுகிறது.<br /><br />பிரபாகரனுக்கான வெற்றிடம் இன்னும் காலியாகவே இருக்கிறது.அந்த ஆளுமையை ஜனநாயகத்தில் வெளிப்படுத்த ஒருவருக்குமே வலிமையில்லை.<br /><br />எந்த ஒரு நிகழ்வும் செய்தியாக நோக்கும் போது அதன் வலியை உணரமுடிவதில்லை.உதாரணமாக அலெக்ஸ் பால் மேனன் என்ற கலெக்டர் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்டார் என்ற செய்திக்கும் பதிவுலக நண்பரின் நண்பர் என்று அறியும் போது ஏற்படும் அதிர்ச்சிக்கும் உணர்வு வேறுபாடுகள் இருந்தது எனக்கு.<br /><br />இழப்புக்கள்,வன்கொடுமைகளை நீங்கள் உணர்வதற்கும்,விமர்சனம் செய்பவர்களின் மண்டை நாளங்களுக்கும் வித்தியாசமிருக்கிறது.<br /><br />உங்கள் எழுத்துக்கள் அத்தி பூப்பதாக இல்லாமல் முப்போக நெல்லாக விளையட்டும்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-89796567894405412512012-05-08T23:39:18.436-04:002012-05-08T23:39:18.436-04:00சொந்தப் பெயரில் வந்து கருத்துச் சொல்லத் திராணியற்ற...சொந்தப் பெயரில் வந்து கருத்துச் சொல்லத் திராணியற்றது ஒன்று வந்து கதைத்திருக்கிறது. அது யாரென்பதையும் என்னால் ஊகிக்க முடிகிறது.<br /><br />எது எவ்வாறு இருப்பினும், வந்து பேசிய அனாமதேயம் அடிப்படை அறிவற்றது என்பதை 'கற்பழித்தார்கள்'என்ற சொல்லின் மூலம் அறிந்துகொண்டேன். 'கற்பழித்தல்'என்ற பதமே தவறானது. 'பாலியல் வன்கொடுமை, வல்லுறவு..'இன்ன பிற சொற்களைப் பயன்படுத்தப் பழகுங்கள். அதிலும், பலாத்காரமாகப் புணர்வதில் 'உறவு'எங்கிருந்து வந்தது என்ற கேள்வியும் உண்டு. ஒருவரது கற்பையும் ஒருவரும் அழிக்கமுடியாது. மேலும், கற்பு என்றால் என்ன என்பது குறித்தும் கேள்விகள் உண்டு. உடல் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை அது.<br /><br />பேரினவாத அரச படைகளால் தமிழ்ப் பெண்கள் சிதைக்கப்பட்டார்கள் என்பதை உலகத்திற்கு அறியத் தருவதானது உங்களை எந்த வகையில் தொந்தரவு செய்கிறது? அதைப் பற்றி எழுதாமல், பேசாமல் மௌனம் காத்து இலங்கை அரசுக்கு 'புனித'ப் பட்டம் வாங்கித் தரவேண்டுமென்கிறீர்களா? ஒரு இனத்தின் அழிவைப் பற்றி, அந்த இனத்தின் மீது பேரினவாதிகளால் ஏவிவிடப்பட்ட கொடூரங்களைப் பற்றி நாங்கள் எழுதத்தான் செய்வோம். இதில் பிரச்சாரம் ஒன்றுமில்லை.<br /><br />ஊதுகுழல்களாகிய உங்களுக்கே இவ்விடயங்களில் மௌனம் சாத்தியம். எங்களுக்கில்லை.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com