tag:blogger.com,1999:blog-34103693.post2445316487876820842..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: மாயக்குதிரைதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-34103693.post-35102073878494124572014-02-23T12:00:50.836-05:002014-02-23T12:00:50.836-05:00தங்களிடம் இரவல் வாங்கி படித்த தஸ்தாவெஸ்கியின் சூத...தங்களிடம் இரவல் வாங்கி படித்த தஸ்தாவெஸ்கியின் சூதாடி ஞாபகத்துக்கு வருகிறது.. நண்றி தமிழ்நதி அக்கா..( prasanna)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-23768953922439370792013-05-11T12:56:58.730-04:002013-05-11T12:56:58.730-04:00அன்புள்ள ஹமீத்,
இந்தச் சிறுகதை குறித்து நான் மதிக...அன்புள்ள ஹமீத்,<br /><br />இந்தச் சிறுகதை குறித்து நான் மதிக்கும் வேறு சிலரும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்கள். ஓரளவுக்கு என் வாழ்வோடு தொடர்புடையது என்பதால் நுணுக்கமாக எழுதமுடிந்தது. இறைவன் மீது சத்தியம் செய்தெல்லாம் இதனைக் கடந்து செல்வதற்கு அளவிறந்த மனவுறுதி வேண்டும். அது இல்லாதவர்கள் என்னதான் செய்வார்கள்...; இந்த மாயச்சகதியினுள் மீண்டும் மீண்டும் சென்று விழுவதைத் தவிர.<br /><br />உங்கள் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி தோழர்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-71633897578368594432013-05-11T03:36:28.444-04:002013-05-11T03:36:28.444-04:00சிறுகதைகள் வாசித்துச் சில வருடங்கள் கடந்துவிட்டன. ...சிறுகதைகள் வாசித்துச் சில வருடங்கள் கடந்துவிட்டன. அனால், எதேச்சையாக அண்மையில் 'மாயக் குதிரை'படித்தேன். தங்களின் முக நூலிலா அல்லது தங்களின் வேறு தளத்திலா..என்பது ஞாபகத்திலில்லை. அன்று தொடக்கம் இந்தக் கதை எனக்குள் ஆழப் புதைந்து, அடிக்கடித் தானிருப்பதை ஓர் அதிர்வின் மூலமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த 777, அதை அடையத் துடிக்கும் அவள், அவளின் உள்மனப் போராட்டம், தோல்விகளில் எழும் அந்த மனதின் இரணம் கலந்த ஓலம், மீண்டுமான நம்பிக்கை,அதற்கான எத்தனங்கள்...<br /><br />சத்தியமாகச் சொல்கிறேன்...மிக நீண்ட காலங்களின் பின்னர் ஒரு சிறந்த க(வி)தையை வாசித்தேன். இன்னொரு முறை படிக்க வேண்டுமென இருந்த ஆவல் இப்போது நிறைவேறுகிறது.<br /><br />ஒரு விடயம்: சூது என்பது புகைப் பழக்கம் போல-குடிப் பழக்கம் போல உடலோடு கலந்துவிட்ட பழக்கமல்ல. அது மனதோடு மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளது. ஆன்மீகத்தின் மூலம்,'இனி மரணம் வரை சூதைத் தொட மாட்டேன்' என்று நாம் மிக நேசிக்கும் இறைவன் மேல் ஆணையிட்டு, தியானம் போன்ற விடயங்களில் ஈடுபட்டு வரலாம். 'யாரோ தோற்கும் காசை வென்று நான் வாழ வேண்டுமா..?' என்று எமக்குள் கேள்விகளை எழுப்பி, விடை காணும் பட்சத்தில் சூதின் மேலே வெறுப்பு வரும்; விட்டு விடலாம். இப்படி இன்னும் பல வழிகள் இருக்கின்றன...<br /><br />திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான்: ''சூதை விட்டு விடுங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.'' <br /><br />சிந்தித்துப் பார்த்தால் இந்த வசனம் எத்தனையோ விடயங்களைப் பேசுவதைக் காணலாம்.S. Hameethhttps://www.blogger.com/profile/05177322817969660126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-873879102179216452012-09-27T13:20:25.955-04:002012-09-27T13:20:25.955-04:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_5868.html) சென்று பார்க்கவும்...<br /><br />நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-75598501787811320622012-08-15T19:24:08.093-04:002012-08-15T19:24:08.093-04:00மிக அழகாக இயற்கையாக எம் அவலம் சொல்லப்பட்ட படைப்பு....மிக அழகாக இயற்கையாக எம் அவலம் சொல்லப்பட்ட படைப்பு. வாழ்த்துக்கள்.Michaelpillaihttps://www.blogger.com/profile/13187342358898401281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-59823265565676018562012-08-13T11:29:38.764-04:002012-08-13T11:29:38.764-04:00நல்லது சக்திவேல். அதுவொரு மாயச்சகதி. விழுந்தால் எழ...நல்லது சக்திவேல். அதுவொரு மாயச்சகதி. விழுந்தால் எழுந்திருப்பது கடினம்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-1511606327203349482012-08-13T05:44:29.210-04:002012-08-13T05:44:29.210-04:00>அங்கு விளையாடினீர்களா? இங்கு பெரும்பாலான தமிழ்...>அங்கு விளையாடினீர்களா? இங்கு பெரும்பாலான தமிழ் ஆட்கள் கௌரவப் பிரச்சனை காரணமாக 'பார்த்தேன்'என்றுதான் கதைப்பார்கள்<br /><br />இல்லை, நான் கசீனோ விளையாடுவதில்லை, ஒரு சதம், இரண்டு சதத்திற்குக் கூட. போனமாதம் கனடா வந்திருந்தேன். தம்பி குடும்பம் கனடாவில். குடும்பமாக நயாகரா வந்தோம். கார் பார்க் பண்ணியது நீர்வீழ்ச்சிக்கு எதிரில் இருந்த கசீனோவில். முன்பு பார்க்கிங் இலவசம் என்று ஆரோ சொன்னார்கள். இப்ப நாளொரு கட்டணம். (இரண்டு முறை நயாகரா வந்தபோதும் இரு வேறு கட்டணங்கள்). எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-11506779713349585992012-08-12T11:18:55.189-04:002012-08-12T11:18:55.189-04:00சக்திவேல்,
//போனமாதம்தான் நயாகரா போயிருந்தபோது அந...சக்திவேல்,<br /><br />//போனமாதம்தான் நயாகரா போயிருந்தபோது அந்தக் கசீனோ'வையும் பார்த்தேன்.//<br /><br />அங்கு விளையாடினீர்களா? இங்கு பெரும்பாலான தமிழ் ஆட்கள் கௌரவப் பிரச்சனை காரணமாக 'பார்த்தேன்'என்றுதான் கதைப்பார்கள். விளையாடியதைச் சொல்லமாட்டார்கள். அங்கே இரண்டு பெரிய 'காசினோ'க்கள் இருக்கின்றன. நீர்வீழ்ச்சிக்குப் போகும் வழியில் ஒன்று. எதிரே ஒன்று.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-72175969054889334572012-08-12T07:02:16.576-04:002012-08-12T07:02:16.576-04:00Addiction என்பது ஆண்/பெண் என்று இல்லாமல் பொதுவானது...Addiction என்பது ஆண்/பெண் என்று இல்லாமல் பொதுவானது என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.<br /><br />போனமாதம்தான் நயாகரா போயிருந்தபோது அந்தக் கசீனோ'வையும் பார்த்தேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-83637931786593176512012-08-09T21:50:19.786-04:002012-08-09T21:50:19.786-04:00கருணாகரமூர்த்தி,
உங்கள் மகள் காருண்யாவிலிருந்து அ...கருணாகரமூர்த்தி,<br /><br />உங்கள் மகள் காருண்யாவிலிருந்து அந்தப் பெயரை எடுத்துக்கொண்டீர்கள் போலும். இரண்டாம் உலக யுத்தத்தைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இப்போது வாழும் ஜேர்மனியைப் பற்றிய தெளிந்த சித்திரம் அதன்பிறகு எனக்குக் கிட்டலாம். அங்கு குறிப்பிடத்தக்க அளவில் சூதாட்ட விடுதிகள் உண்டு என்பது இதுவரையில் அறிந்திராதது. <br /><br />நன்றி Kurusu. socrates,<br /><br />ஆம். அது புதிய சூதாட்டந்தான். ஆனால், தோல்வி புதிதாக இருக்காது. தொடங்கும் உற்சாகம் மட்டுமே புதியது.<br /><br />வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி பிரபு.<br /><br />வழக்கம்போல பதிலளிக்கத் தாமதமாகிவிட்டது அம்பேதன்.<br /><br />முடிவு உங்களைப் போன்றவர்களால் ஊகிக்கத்தக்கதே. அப்படித்தானே இருக்கமுடியும்? திருந்துகிறேன் வருந்துகிறேன் என்று முடிப்பது இயல்பை மீறியதல்லவா:))<br /><br />ஆம். அந்தப் பெண்ணை நான் சந்தித்திருக்கிறேன். சில காரணங்களால் அவளுடைய பெயரை வெளிப்படுத்த முடியவில்லை.<br /><br />//பொதுவாக குடும்பத்தையும், வெளிப்படையாக தமிழ்க் குடும்பப் பெண்ணையும் 'அடிமைகளாக' சித்தரிக்கும் இடம்; (Mocking at stereotype roles); ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.///<br /><br />பிடிப்பதும் பிடிக்காதிருப்பதும் வாசகனின் உரிமை. ஆனால், ஆண்-பெண்களுக்கிடையிலான பாரபட்சங்கள் குறைந்தபட்சம் பேசப்படவாவது வேண்டுந்தானே...<br /><br />///மறுநாள் மாதர் இயக்கங்கள், என்ஜிஒக்கள் முதல், அஸ்ஸாம் மாநில முதல்வர் வரை கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப் போராட, ஊர்வலம் போக ஆரம்பித்தனர். யாரும் குடிக்கு எதிராக சம்பிரதாயமாகவேனும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.<br /><br />இங்கே சம உரிமை மட்டுமே பார்க்கப்படுகிறது. சமூக நலன் பார்க்கப்படவே இல்லை.//<br /><br />நீங்கள் சொன்ன குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், 'இப்படியொரு மனப்பாங்குடைய தேசத்தில் பாதுகாப்பின் நிமித்தம் பெண்கள் பொது இடங்களில் குடிக்கக்கூடாது'என்பதைப் புரிந்துகொள்கிறேன். சமூகப் பாதுகாப்பு முக்கியம்.<br /><br />ஆனால், குடிப்பது உள்ளடங்கலாக அனைத்து உரிமைகளும் எப்பாலினருக்கும் பொதுவானதாக இந்தச் சமூகம் மாறவேண்டும் என்றொரு கனவுண்டு. <br /><br />குடிப்பது சரியா? தவறா? என்பது வேறொரு விவாதத்துள் செல்லும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-91605979853310994542012-08-01T14:50:59.675-04:002012-08-01T14:50:59.675-04:00அருமையான நடை. முடிவு எதிர்பார்த்தது தான். கதையில் ...அருமையான நடை. முடிவு எதிர்பார்த்தது தான். கதையில் தன் இளவயது வாழ்வின் கஷ்டங்களிலிருந்து தன்னை மீட்டெடுக்க இயலாது லட்சியங்களற்று வெற்று ஆளாய்ப் போனாள் ஒரு ஈழப் பெண் என்பது அதிர்ச்சியாய் இறங்கியது. அது நிஜவாழ்வில் நீங்கள் சந்தித்த நிஜமென்றதும் மேலும் அதிகமானது. <br />>>>><br />‘ஒரு தமிழ்ப் பெண்… குடும்பத்தில் பொறுப்பாக இருக்க வேண்டியவள்… இங்கு என்ன செய்கிறாய்?’என்றொரு பார்வையை உரிமையோடும் கண்டிப்போடும் அவளை நோக்கி எறிந்த ஆண்கள் உண்டு. தமிழ்ப் பெண்கள் குடிக்கக்கூடாது என்பது போன்ற விதி சூதிற்கும் பொருந்தும் என்பதை அவள் அறிவாள். ஆரம்பத்தில் அத்தகைய பார்வைகளுக்கு அஞ்சி அவசரமாக அவ்விடத்தைக் கடந்து சென்றாள். பிறகோ, ‘நீ மட்டும் இஞ்சை என்ன பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்?’என்ற பார்வையை அலட்சியமாக திருப்பி எறியப் பழகினாள்.<br />>>>>>><br />பொதுவாக குடும்பத்தையும், வெளிப்படையாக தமிழ்க் குடும்பப் பெண்ணையும் 'அடிமைகளாக' சித்தரிக்கும் இடம்; (Mocking at stereotype roles); ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.<br /><br />சமீபத்தில் அஸ்ஸாமில் இப்படி பாரில் தனது பெண் தோழிக்காக பார்ட்டி கொடுக்க ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வந்து குடித்து விட்டு, கார்டு தொலைந்து போனதால் பில் கட்ட முடியாமல் பாரிலிருந்த வெளியேற்றப்பட்டு, நண்பர்களை குற்றம் சொல்லி அவர்களுடன் சண்டை போட, அப்போது பாருக்கு வெளியே நின்றிருந்த மற்றொரு குடிகார ஆண்களின் கும்பல் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உட்புகுந்து அந்தப் பெண்ணிடம் அத்துமீற ஆரம்பிக்க, இவளின் நண்பர்கள் எஸ்கேப்பாக, இரவு 10 மணிக்கு நடுரோட்டில் நடந்த அவலத்தை ரோட்டில் ரோந்து வந்த போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி பெண்ணை காப்பாற்றினார். <br /><br />மறுநாள் மாதர் இயக்கங்கள், என்ஜிஒக்கள் முதல், அஸ்ஸாம் மாநில முதல்வர் வரை கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப் போராட, ஊர்வலம் போக ஆரம்பித்தனர். யாரும் குடிக்கு எதிராக சம்பிரதாயமாகவேனும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. <br /><br />இங்கே சம உரிமை மட்டுமே பார்க்கப்படுகிறது. சமூக நலன் பார்க்கப்படவே இல்லை.<br /><br />மது,சூது,மாது இவற்றில் விழுந்தவன் எழவே முடியாது என்பது பழைய (ஆண்களுக்கான) பழமொழி. மது,சூது,புருஷன் இவற்றில் விழுந்தவள் எழவே முடியாது என்று சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.அம்பேதன்https://www.blogger.com/profile/10954064013397644469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-47458713505171372012012-08-01T14:50:42.597-04:002012-08-01T14:50:42.597-04:00அருமையான நடை. முடிவு எதிர்பார்த்தது தான். கதையில் ...அருமையான நடை. முடிவு எதிர்பார்த்தது தான். கதையில் தன் இளவயது வாழ்வின் கஷ்டங்களிலிருந்து தன்னை மீட்டெடுக்க இயலாது லட்சியங்களற்று வெற்று ஆளாய்ப் போனாள் ஒரு ஈழப் பெண் என்பது அதிர்ச்சியாய் இறங்கியது. அது நிஜவாழ்வில் நீங்கள் சந்தித்த நிஜமென்றதும் மேலும் அதிகமானது. <br />>>>><br />‘ஒரு தமிழ்ப் பெண்… குடும்பத்தில் பொறுப்பாக இருக்க வேண்டியவள்… இங்கு என்ன செய்கிறாய்?’என்றொரு பார்வையை உரிமையோடும் கண்டிப்போடும் அவளை நோக்கி எறிந்த ஆண்கள் உண்டு. தமிழ்ப் பெண்கள் குடிக்கக்கூடாது என்பது போன்ற விதி சூதிற்கும் பொருந்தும் என்பதை அவள் அறிவாள். ஆரம்பத்தில் அத்தகைய பார்வைகளுக்கு அஞ்சி அவசரமாக அவ்விடத்தைக் கடந்து சென்றாள். பிறகோ, ‘நீ மட்டும் இஞ்சை என்ன பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்?’என்ற பார்வையை அலட்சியமாக திருப்பி எறியப் பழகினாள்.<br />>>>>>><br />பொதுவாக குடும்பத்தையும், வெளிப்படையாக தமிழ்க் குடும்பப் பெண்ணையும் 'அடிமைகளாக' சித்தரிக்கும் இடம்; (Mocking at stereotype roles); ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.<br /><br />சமீபத்தில் அஸ்ஸாமில் இப்படி பாரில் தனது பெண் தோழிக்காக பார்ட்டி கொடுக்க ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வந்து குடித்து விட்டு, கார்டு தொலைந்து போனதால் பில் கட்ட முடியாமல் பாரிலிருந்த வெளியேற்றப்பட்டு, நண்பர்களை குற்றம் சொல்லி அவர்களுடன் சண்டை போட, அப்போது பாருக்கு வெளியே நின்றிருந்த மற்றொரு குடிகார ஆண்களின் கும்பல் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உட்புகுந்து அந்தப் பெண்ணிடம் அத்துமீற ஆரம்பிக்க, இவளின் நண்பர்கள் எஸ்கேப்பாக, இரவு 10 மணிக்கு நடுரோட்டில் நடந்த அவலத்தை ரோட்டில் ரோந்து வந்த போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி பெண்ணை காப்பாற்றினார். <br /><br />மறுநாள் மாதர் இயக்கங்கள், என்ஜிஒக்கள் முதல், அஸ்ஸாம் மாநில முதல்வர் வரை கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப் போராட, ஊர்வலம் போக ஆரம்பித்தனர். யாரும் குடிக்கு எதிராக சம்பிரதாயமாகவேனும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. <br /><br />இங்கே சம உரிமை மட்டுமே பார்க்கப்படுகிறது. சமூக நலன் பார்க்கப்படவே இல்லை.<br /><br />மது,சூது,மாது இவற்றில் விழுந்தவன் எழவே முடியாது என்பது பழைய (ஆண்களுக்கான) பழமொழி. மது,சூது,புருஷன் இவற்றில் விழுந்தவள் எழவே முடியாது என்று சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.அம்பேதன்https://www.blogger.com/profile/10954064013397644469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-17863573383300499732012-07-10T14:58:02.498-04:002012-07-10T14:58:02.498-04:00வாசிப்பவனின் ஞாபக அடுக்கிலேயே கதைசொல்லி இயங்கத்துவ...வாசிப்பவனின் ஞாபக அடுக்கிலேயே கதைசொல்லி இயங்கத்துவங்குகிறான் என்பதை நம்பும் மரபிலேயே என் வாசிப்புதளம் இருக்கிறது. சூதாட்டகூடத்திலிருந்து அவள் வெளியேறிவிட்டாலும் கண்ணீரையும் அன்பையும் போண் வழியே செலுத்தி புதிய சூதாட்டத்தை அவள் துவக்கிவிடுகிறாள். பந்தயபணம் நிபந்தனையுடன் கிடைத்துவிடுமென்றாலும் அது புதிய சூதாட்டமென்றே நான் நம்புகிறேன். சூதாட்டகூடத்திலிருந்து திறக்கப்பட்ட கதவு புதிய சூதாட்டகூடத்திற்கே அழைத்து செல்கிறது. புதிய வாசிப்பனுபவத்தை கதைசொல்லி திறந்துவிடுகிறார்.Anonymoushttps://www.blogger.com/profile/16367313868547663881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15729423515190763202012-07-02T12:09:14.174-04:002012-07-02T12:09:14.174-04:00என்ன அப்படிச்சொல்லிவிட்டீர்கள். பெர்லின் என்றால் ...என்ன அப்படிச்சொல்லிவிட்டீர்கள். பெர்லின் என்றால் அது இன்னொரு லாஸ் வெகாஸாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு நகரம். அதன் சூதாட்ட மையங்கள் பற்றி பெர்லின் இரவுகளில் லேசாகக்குறிப்பிட்டுள்ளேன். அதன் புகுத்திய பதிப்பில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத எண்ணம். ‘ காருண்யன்’ நான் கவிதை பெய்யும் வேளைகளில் சூடிக்கொள்ளும் பெயர்களில் ஒன்று.Garunyan Konfuziushttps://www.blogger.com/profile/09668407475021441085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-17613712265604573672012-07-01T19:56:32.018-04:002012-07-01T19:56:32.018-04:00நன்றி kurusu socrates,
//கதையின் சூதாட்டகூடத்திலி...நன்றி kurusu socrates,<br /><br />//கதையின் சூதாட்டகூடத்திலிருந்து நான் வெளியேற வேண்டி திறந்த கதவுகள் இன்னொரு சூதாட்ட அரங்கினுள்ளே அழைத்துபோகும் தந்திரத்திலிருந்து எப்படி தப்பிப்பது?//<br /><br />எந்த சூதாட்ட அரங்கு அது? நீங்கள் வாழும் பாலையில் அப்படி அரங்குகள் உள்ளனவா?<br /><br />நன்றி கருணாகரமூர்த்தி...<br /><br />அந்நேரம் அப்படித்தான் உணர்வுகள் இருக்கும்:))) உங்கள் பெயரைப் பார்த்ததும் யாரோ என்று நினைத்தேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-46333415015789198322012-07-01T15:04:18.814-04:002012-07-01T15:04:18.814-04:00மிகச்சிறப்பானதொரு வார்ப்பு. ஜெ.மோவின் ‘அறம்’ கதை...மிகச்சிறப்பானதொரு வார்ப்பு. ஜெ.மோவின் ‘அறம்’ கதையில் வரும் அப்பாவி எழுத்தாளன் ஒரே மகளின் கல்யாணத்தை நிறைவேற்றமுடியாமல் தவித்துக்கொண்டிருப்பார். “ அவன் (அந்த பிரசுரகர்த்தா) மட்டும் எனக்குத்தரவேண்டிய இரண்டாயிரத்தையும் தூக்கிக்கடாசிட்டு கொஞ்சம் ஊம்பிட்டுப்போடான்னா உக்கார்ந்திருப்பேன்னு” சொல்வார். // காசினோவில நான் தோற்றுப்போய் என்ன செய்யிறதெண்டு தெரியாம யோசிச்சுக்கொண்டிருக்கேக்கை எவனாவது வந்து ஐந்நூறு டொலர் தாறன் வா எண்டு கூப்பிட்டிருந்தால் போயிருப்பன்”//என்கிற வரிகள் தேவைகள் மனிதனை என்னவென்னவெல்லாம் பண்ணவைக்கும் என்பதைத் துணிச்சலாக வடித்த வரிகள். அனுபவித்துப்படித்தேன். வாழ்த்துக்கள்.Garunyan Konfuziushttps://www.blogger.com/profile/09668407475021441085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-70929804588572937122012-06-21T02:51:51.315-04:002012-06-21T02:51:51.315-04:00சூதாட்டவிடுதியின் இரைச்சலில் கடவுளுக்கு கேட்காமல் ...சூதாட்டவிடுதியின் இரைச்சலில் கடவுளுக்கு கேட்காமல் போன குரல் என் காதுகளுக்குள் ரீங்கரிப்பதை நான் எங்ஙனம் நிறுத்த? கதையின் சூதாட்டகூடத்திலிருந்து நான் வெளியேற வேண்டி திறந்த கதவுகள் இன்னொரு சூதாட்ட அரங்கினுள்ளே அழைத்துபோகும் தந்திரத்திலிருந்து எப்படி தப்பிப்பது?Anonymoushttps://www.blogger.com/profile/16367313868547663881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-50013234031499499532012-06-21T02:51:13.947-04:002012-06-21T02:51:13.947-04:00சூதாட்டவிடுதியின் இரைச்சலில் கடவுளுக்கு கேட்காமல் ...சூதாட்டவிடுதியின் இரைச்சலில் கடவுளுக்கு கேட்காமல் போன குரல் என் காதுகளுக்குள் ரீங்கரிப்பதை நான் எங்ஙனம் நிறுத்த? கதையின் சூதாட்டகூடத்திலிருந்து நான் வெளியேற வேண்டி திறந்த கதவுகள் இன்னொரு சூதாட்ட அரங்கினுள்ளே அழைத்துபோகும் தந்திரத்திலிருந்து எப்படி தப்பிப்பது?Anonymoushttps://www.blogger.com/profile/16367313868547663881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44126099536523075122012-06-19T20:17:24.240-04:002012-06-19T20:17:24.240-04:00நன்றி ரௌத்ரன்,
யாராவது பாராட்டினால் என்ன பதில் எழ...நன்றி ரௌத்ரன்,<br /><br />யாராவது பாராட்டினால் என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை:)))தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-87738632753630670672012-06-19T15:44:39.676-04:002012-06-19T15:44:39.676-04:00சொக்கத்தான் வைக்கிறது..சூதும் இந்த எழுத்தும்.வாசித...சொக்கத்தான் வைக்கிறது..சூதும் இந்த எழுத்தும்.வாசித்த பொழுது ஏதேதோ எழுத தோன்றியது.கெரகம் இப்பொழுது எல்லாம் மறந்து விட்டது...<br /><br />வெகு நாளில் வலையில் வாசித்த மிக அழகான கதை.ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25429476875822017382012-06-19T09:58:11.135-04:002012-06-19T09:58:11.135-04:00நன்றி சுரேஷ் கண்ணன்,
சூதாடிகளும் குடி மற்றும் புக...நன்றி சுரேஷ் கண்ணன்,<br /><br />சூதாடிகளும் குடி மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவருதல் அரிதிலும் அரிதென நினைக்கிறேன். அந்தக் கதையை எழுதும்போது, அவள் அதிலிருந்து வெளிவந்து விடவேண்டுமே என்ற பரிதவிப்போடே எழுதினேன். ஆனால், அவள் வரமாட்டாள் என்பதை உள்ளுக்குள் அறிந்திருந்தேன்.:)))<br /><br />வணக்கம் எஸ்.எஸ்.ஜெயமோகன்,<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி. ஆம்...அவளுக்கும் ஒரு பெயர் வைத்திருக்கலாந்தான். அதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தேன். இப்போதெல்லாம் பொருத்தமற்ற பெயர்களை வைக்கத் தயக்கமாக இருக்கிறது. ஏனெனில், அந்தப் பெண் எனக்குப் பரிச்சயமானவள்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-653110960710502282012-06-19T09:41:36.202-04:002012-06-19T09:41:36.202-04:00நவீனமானதொரு சிறுகதை.
சிறப்பான வெளிப்பாடு...
மிகவும...நவீனமானதொரு சிறுகதை.<br />சிறப்பான வெளிப்பாடு...<br />மிகவும் ரசித்தேன் !<br /><br />'சுதன்' என்று உங்கள் கதை- நாயகியின் காதலனுக்கு அழகான ஒரு பெயரை சூட்டி இருந்தீர்கள்.<br />அனால், கதைநாயகின் பெயரை நீங்கள் குறிப்பிடவே இல்லை. அவள்-இவள் என்று <br />கதை முழுவதும் வருகிறது.<br /><br />அவளுக்கும் ஒரு பெயர் வைத்து, <br />அவளது பெயரையும் குறிப்பிட்டு எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து.SS JAYAMOHANhttp://ssjayamohan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-76473542493609845192012-06-18T22:02:51.290-04:002012-06-18T22:02:51.290-04:00தமி்ழ்நதி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அந்தப் பெண...தமி்ழ்நதி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அந்தப் பெண்ணின் பதட்டமும் அகவயமான தவிப்பும் மிகக் கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது. இறுதிவரி அப்படி அமையாவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.:)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-24268895870019772862012-06-16T11:56:39.277-04:002012-06-16T11:56:39.277-04:00தீபிகா,
ஆம்.. அதுவொரு மிகப்பெரிய போராட்டமே. சூதாட...தீபிகா,<br /><br />ஆம்.. அதுவொரு மிகப்பெரிய போராட்டமே. சூதாட்டத்தின் மாயவலையில் வீழ்ந்தவர்கள் தம்மை விடுவித்துக்கொள்வது மிகக் கடினம்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-89302528610519742372012-06-16T04:16:40.514-04:002012-06-16T04:16:40.514-04:00காசினோ என்கிற சூதாட்டம் ஆண்-பெண் வேறுபாடுகளற்று தொ...காசினோ என்கிற சூதாட்டம் ஆண்-பெண் வேறுபாடுகளற்று தொற்றிக் கொள்ளும் ஒரு போதை என்பதை அழகாக சொல்கிறது கதையோட்டம். விடவிரும்பும் மனதுக்கும் விடமுடியாமல் தவிக்கும் மனதுக்கும் இடையேயான போராடட்டத்தின் இயல்பை அப்படியே சொல்லி வைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.com