tag:blogger.com,1999:blog-34103693.post7420998697092215408..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலிதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-34103693.post-6787075026545236292009-06-24T01:37:24.009-04:002009-06-24T01:37:24.009-04:00மயாதி,
நீங்கள் நுட்பமாக அவதானித்திருக்கிறீர்கள். ...மயாதி,<br /><br />நீங்கள் நுட்பமாக அவதானித்திருக்கிறீர்கள். பல தடவை தடுமாறியபின்னரே 'சர்ச்சைகளின் காதலி'என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் சொன்ன அதே சமாதானத்தை 'சர்ச்சைகளால் காதலிக்கப்பட்டவர்'என்ற பொருளும் வரும் என்பதை நினைத்து அதைத் தலைப்பாக வைத்தேன். பொருள் மயக்கம் தரத்தக்க தலைப்புத்தான் அது. தமிழில் நாம் எழுதினாலும், தமிழ் மிகக் கவனமாகத் தன்னை எழுதிக்கொள்கிறது.<br /><br /><br />நன்றி நந்தா,<br /><br />நீங்கள் சொல்வது உண்மை. நமக்குத் தவறெனத் தோன்றுவதை ஒருவர் எழுதும்போது, அது கருத்துருவாக்கம் பெற்று உண்மை செத்துப்போகுமோ என்று அஞ்சுகிறோம். அந்தப் பதட்டத்தினால் பதில் பதிவு எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம். சும்மா இருக்க விடமாட்டுதாம் இந்த மனச்சாட்சி.<br /><br />மயாதி,<br /><br />சுயஇன்பம் பற்றிய சரவணனின் கருத்துக்கு நீங்கள் பதிலளித்திருப்பது மகிழ்ச்சி. அதனால் எவ்வித இழப்புமில்லை என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாகத்தான் நானும் வாசித்திருக்கிறேன்.<br /><br />"சுயஇன்பம் சமூகத்துக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்ற கருத்தை வேண்டுமானால் சொல்லலாம்"<br /><br />இந்தச் சமூகம் காமத்திற்கு வேறென்ன வடிகாலை, வழிகளை வைத்திருக்கிறது நண்பரே?<br /><br />அருண்மொழிவர்மன்,<br /><br />"மற்றும்படி, ஒரு பெண் எழுதுவதை கூட (அப்ப்டி எழுதினால்கூட ரமணிசந்திரன் பாணியில்தான் எழுதலாம்) ஏற்றுக்கொள்ளாத இந்த சமூகம், அவர் மரபு மீறி எழுதும்போது அதை தாங்கமுடியாமல், அவர்கள் மீது சேற்றை வாரி வீசும் ஒருசெயலாகதான் இதை பார்க்கவேண்டும்."<br /><br />என்று சொல்லியிருந்தீர்கள். மேற்கண்ட ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்காகவே கமலாதாஸ் போன்றவர்கள் எழுதினார்கள். கருத்துச் சுதந்திரத்தின் வாயில் வழியாக அடிமைகள் தப்பித்துப் போய்விடுவார்களோ என்ற பதட்டத்தின் வெளிப்பாடாகவே ஜெயமோகன் வகையறாக்களின் எதிர்வினைகளைப் பார்க்கவேண்டியுள்ளது. நம் பெண்களையும் சொல்வதற்கில்லை.. இந்தியாவிலிருந்து வரும்போது ரமணிச்சந்திரன் புத்தகம் வாங்கிவாருங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்கே கொண்டுபோய்த் தலையை இடித்துக்கொள்வதென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.<br /><br />வினோதினி,<br /><br />நீங்கள் வந்து கதைக்கும்போதெல்லாம் குற்றவுணர்வாக இருக்கிறது. உங்கள் புத்தகத்திற்கு இன்னமும் விமர்சனம் எழுதவில்லை. இந்தப் பயணத்தின்போதாவது எழுதிவிடுவேன் என்று நினைக்கிறேன். நீங்கள் மொழிபெயர்த்த கவிதையைத் தட்டச்சியிருந்தால் எனக்கு அனுப்பிவையுங்களேன் தயவுசெய்து. நன்றி.<br /><br />விவேக்,<br /><br />பூனைக்குட்டி விரைவில் என்னைவிட்டுப் போகிறது. வார்ப்புருவை எளிமைப்படுத்துகிறேன்.கொஞ்சம் அவகாசம் தாருங்கள்.<br /><br />வஹ்ஹாபி,<br /><br />உங்கள் வலைத்தளத்தை நான் ஏற்கெனவே படித்துவிட்டேன். நிறையத் தரவுகள் கிடைத்தன. நன்றி.<br /><br />சாத்திரி,<br /><br />'மே தாவி'களை நான் படித்திருக்கிறேன். பிடித்தும் இருந்தது. இப்போதும் அவரது புனைவுகள் பிடிக்கின்றன. அபுனைவுகளிலுள்ள அபத்தங்கள் மற்றும் அதிரடிக் கருத்துக்கள்தாம் அருட்டுகின்றன.<br /><br /><br />அய்யனார்,<br /><br />'முழிபெயர்த்தால்'எப்படிப் போடுவது? நீஙகளே யோசித்துப் பாருங்கள்:) என்னால் பின்னூட்டங்களை moderate செய்ய இயலவில்லை. நீங்களும் நன்றாகவே முழி மன்னிக்கவும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உடனே ஞாபகம் வரவில்லை. அதனால் எடுத்துப் போடவில்லை அய்யனார்.<br /><br />பரிந்துரைக்கு நன்றி யோகன். எழுத்துக்களைக் கடும் நிறத்தில் போட்டும் அப்பத்தான் தெரிகிறதாம். ஆனால், என் கணனியில் மிகத் துல்லியமாகத் தெரிகிறது. வேறு வழியில்லை.. வார்ப்புருவை மாற்றித்தானாக வேண்டும் போலிருக்கிறது.<br /><br />அனானி நண்பரே,<br /><br />அண்மையில் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டேன். இரண்டிலும் 'ஈழத்தமிழர் பேரழிவைப் பற்றி தமிழகத்து எழுத்தாளர்கள் பேசவில்லை'என்ற விசயம் பேசப்பட்டது.பேசப்பட்டது... பேசப்பட்டது. அவ்வளவுதான். பேசியவர்களை 'இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் எழுதவில்லை?'என்று கேட்டிருந்தால்...? நான் கேட்கவில்லை. கேள்விகளிலுள்ள நியாயத்தைப் பார்ப்பவர் எவருமில்லை...'என்னையா கேட்டாய்?'என்று வன்மம் வளர்ப்பார்கள். என்ன செய்வது? ச்சே...!(என்னையும் சேர்த்துத்தான் ச்சே என்கிறேன்)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-35792058836175872552009-06-24T01:36:55.512-04:002009-06-24T01:36:55.512-04:00சரவணனுடன் ஏற்கெனவே உரையாடிவிட்டேன் அன்றேல் பதிலளித...சரவணனுடன் ஏற்கெனவே உரையாடிவிட்டேன் அன்றேல் பதிலளித்துவிட்டேன். 'இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது சக்தி விரயம்'என்ற அவரது கருத்தினோடு சற்று உடன்பட முடிகிறது. ஆனால், பட்டறிந்தபின்னரே எனக்கும் ஞானம் பிறக்கும். அதுவரையில் செல்வேன் என்றே நினைக்கிறேன்.<br /><br />ராஜா/KVR,<br /><br />"சரவணனும் அடுத்த ஜெயமோகனாக தன்னை உருவகப்படுத்திக்கொள்கிறார் என்று நினைக்கிறேன்."<br /><br />வாதங்களால் சிலவற்றை வெல்லலாம். ஆனால், அடிப்படை உண்மை ஒன்று உண்டு. அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஜெயமோகனுடைய அதிரடியான பல கருத்துக்களும் 'கமலாதாஸ் கரும்புள்ளி'என்ற சரவணனின் ஒற்றைப்படையான பார்வையும் நிச்சயமாக ஏற்புடையனவல்ல. தர்க்கரீதியாகப் பேசக்கூடியவர்கள் அவர்களது கருத்துருவாக்கங்களை மறுத்துரைக்கவேண்டும்.<br /><br />உமா ஷக்தி,<br /><br />வழக்கமாக 'தோழி'என்று விளிப்பீர்கள். இன்று என்னவோ 'நட்சத்திரப் பதிவரே'என்கிறீர்கள். நெருக்கம் பிரிவை வளர்க்கிறதா... என்னமோ நடக்கட்டும் தாயே.. இதுதான் எனது முதல் பதிவு என்பதாக பின்னூட்டம் வேறு... அலுவலகத்தில் வேலை அதிகமா உமா:)<br /><br />குசும்பன்,<br /><br />பெயருக்கேற்றபடி இருக்கிறது உங்கள் பின்னூட்டம்:)<br /><br />சுகுணா,<br /><br />'எனது வாசகர் சரவணன்'இப்போதுதான் பின்னூட்டமிடுகிறார். யாரென்று உண்மையில் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் 'புணர்ச்சி'என்ற சொல் அவருக்குப் பிடிக்கும் என்பதுதான். இரண்டு பின்னூட்டங்களிலுமே 'கூட்டுப்புணர்ச்சி, சுயபுணர்ச்சி, விந்து'இன்னோரன்ன சொற்களைக் காணமுடிந்தது. மேற்கொண்டு என்ன சொல்ல இருக்கிறது:)<br /><br />ஆசிப் மீரான்,<br /><br />நீங்கள் சொன்ன தகவலை நான் அறிந்திருக்கவில்லை. அதனால்தான் மூலம் முத்தியதென்கிறீர்களா...? வழிமொழிகிறேன் என்றால் வம்பாகிவிடும் ஐயா.<br /><br />இந்த 'கலாச்சாரக் காவலாளி'களைப் பற்றி ஒரு பதிவு எழுதலாமென்றிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?<br /><br />--<br />உடன்பிறப்பு, (இந்தப் பெயர் யார் யாரையோ நினைவுபடுத்துகிறது. என் உடன்பிறப்புகளையல்ல)<br /><br />வார்ப்புருவை மாற்றவே நினைத்திருக்கிறேன். 'மாற்றுகிறேன் பேர்வழி'என்று நட்சத்திர வாரத்தை சொதப்பி விடக்கூடாதென்பதால் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கிறேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-86252244339946690762009-06-24T01:03:50.020-04:002009-06-24T01:03:50.020-04:00ஜெமோ எப்போதிலிருந்து அபத்தமாக எழுத ஆரம்பித்தார் தம...ஜெமோ எப்போதிலிருந்து அபத்தமாக எழுத ஆரம்பித்தார் தமிழ்நதி. சாருவின் பதிவை ஒப்புக்கொண்ட பிறகிலிருந்தா.<br /><br />தங்கள் வாசகன்<br />நதிமூலம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-88303321918765662222009-06-24T00:33:49.592-04:002009-06-24T00:33:49.592-04:00/அவரது பிரதிகள் சுட்டிக் காட்டும் அல்லது கலைத்துப்.../அவரது பிரதிகள் சுட்டிக் காட்டும் அல்லது கலைத்துப் போடும் அழகியல் அல்லது அ அழகியல் அல்லது எதிர் அழகியல் குறித்த விஷயங்கள் வாசகப் பரப்பை சென்றடையாமல் தடுத்து நிறுத்துப்படுகிறது/<br /><br /><br />azhakiyal vs. ethir azghakiyal, pirathikal, kalaiththuppOdal!!<br /><br />romba muggiyam.<br /><br />20000 died, 300,000 in camps. no literary mouthpiece cared about the people who share the same language and culture. Why on earth this set of words are being juggled!! <br /><br />For you all, talking about 'Literature' is just an identity buying/lending task.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-30634886849664951692009-06-23T18:31:23.153-04:002009-06-23T18:31:23.153-04:00பூனைக் குட்டியை மாற்றாது. தங்கள் பதிவின் எழுத்துக்...பூனைக் குட்டியை மாற்றாது. தங்கள் பதிவின் எழுத்துக்களை சற்று கடும் நிறத்தில் தேர்ந்தால் வாசிக்க இலகுவாக இருக்குமெனக் கருதுகிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-34557675570247652242009-06-23T16:45:27.763-04:002009-06-23T16:45:27.763-04:00try this one ..
http://petblog-btemplates.blogspo...try this one ..<br /><br />http://petblog-btemplates.blogspot.com/<br /><br />vivekUnknownhttps://www.blogger.com/profile/13891943412372876035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-89241965970669130482009-06-23T15:41:43.806-04:002009-06-23T15:41:43.806-04:00நட்சத்திர வாழ்த்துக்கள் தமிழ்.. நாங்க முழிபெயர்த்த...நட்சத்திர வாழ்த்துக்கள் தமிழ்.. நாங்க முழிபெயர்த்தாலாம் லிங்க் தரமாட்டீங்களா :)<br />இதோ <br />http://ayyanaarv.blogspot.com/2009/06/blog-post.htmlAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-42891794760466863062009-06-23T14:50:50.452-04:002009-06-23T14:50:50.452-04:00கமதாஸ் பற்றி அறிந்திருக்கிறேன்..படித்திருக்கிறேன்....கமதாஸ் பற்றி அறிந்திருக்கிறேன்..படித்திருக்கிறேன்..அது யாருங்க ஜெயமோகன்.. படித்துமில்லை அறிந்ததுமில்லை..பெரீய்ய மேதாவியா?? ஏனென்றால் எனக்கு மே தாவிகளைப்பற்றித்தெரியாதுsathirihttps://www.blogger.com/profile/13658770052400895597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-84975863365041324222009-06-23T14:30:30.272-04:002009-06-23T14:30:30.272-04:00அன்பு நண்பர்களுக்கு,
நாளை நாம் விரிவாக உரையாடலாம்...அன்பு நண்பர்களுக்கு,<br /><br />நாளை நாம் விரிவாக உரையாடலாம். இன்று ஒரேயொரு விடயம் சொல்ல விரும்புகிறேன்.<br /><br />எனது வார்ப்புருவிலுள்ள பூனைக்குட்டி வாசிப்பில் இடைஞ்சல் ஏற்படுத்துவதாக சில நண்பர்கள் சொல்கிறார்கள். எனக்குப் பூனைகளை மிகப் பிடிக்கும். அதனால் வார்ப்புருவிலும் பூனைக்குட்டியை வளர்க்கிறேன். அது உங்களை இடைஞ்சல் செய்கிறதென்றால் மனவருத்தத்தோடு எடுத்துவிடுவதுதான் நியாயம். ஆனால், வேறு வார்ப்புரு மாற்றும்போது ஏற்கெனவே இவ்வலைத்தளத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பல விடயங்கள் இல்லாமல் போகும். அதனால், நிறைய நேரம் இருக்கும் நாளில் மாற்ற உத்தேசம். நட்சத்திர வாரம் முடியும்வரை தயவுசெய்து இந்தப் பூனை உறுத்தலைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அதை நீக்கவேண்டுமென்று நினைக்க உண்மையில் மனம் துக்கமடைகிறது. உயிருள்ள ஒன்றை நீக்குகிறாற்போல... ஆனாலும், வேறு வழியில்லை அல்லவா:(தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-69681881023130051192009-06-23T14:20:32.016-04:002009-06-23T14:20:32.016-04:00கமலாதாஸைக் குறித்து ஒரு மதம் பிடித்தவன் பார்வையில்...கமலாதாஸைக் குறித்து ஒரு மதம் பிடித்தவன் பார்வையில் எனது <a href="http://wahhabipage.blogspot.com/2009/06/blog-post.html" rel="nofollow">பதிவு:</a><br />http://wahhabipage.blogspot.com/2009/06/blog-post.htmlவஹ்ஹாபிhttps://www.blogger.com/profile/11447262607871415470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-72069868023034433812009-06-23T14:18:56.964-04:002009-06-23T14:18:56.964-04:00pl remove background image , or try to change your...pl remove background image , or try to change your template , it's very hard to read ..<br />vivekUnknownhttps://www.blogger.com/profile/13891943412372876035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-52606742208523867772009-06-23T13:13:09.496-04:002009-06-23T13:13:09.496-04:00Hi,
Your article reminded me of my translation of...Hi,<br /><br />Your article reminded me of my translation of the same poem. It appeared in 'Therithal' magazine published in Jaffna. Thanks for the piece.<br /><br />VinothiniVinothininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-69471937297557159682009-06-23T12:10:48.854-04:002009-06-23T12:10:48.854-04:00வணக்கம் தமிழ்நதி
// வழக்கம்போல தனது நியாயத் தராசி...வணக்கம் தமிழ்நதி<br /><br />// வழக்கம்போல தனது நியாயத் தராசிலே கமலாதாஸையும் நிறுத்தி எடைபோட்டபின் அவரால் மொழியப்பட்ட வாசகங்கள் இவைதாம்:<br />//<br /><br />என்ன தமிழ்நதி, ஜெயமோகனின் இது போன்ற கண்டுபிடிப்புகள் எல்லாருமறிந்ததுதானே. இன்னும் அவர், கமலாதாஸ் மேற் சொன்ன காரணங்களால் பைத்தியம் பிடித்து இறந்து போனார் என்று எழுதியிருந்தால் கூட அதிசயமில்லை.<br /><br />மற்றும்படி, ஒரு பெண் எழுதுவதை கூட (அப்ப்டி எழுதினால்கூட ரமணிசந்திரன் பாணியில்தான் எழுதலாம்) ஏற்றுக்கொள்ளாத இந்த சமூகம், அவர் மரபு மீறி எழுதும்போது அதை தாங்கமுடியாமல், அவர்கள் மீது சேற்றை வாரி வீசும் ஒருசெயலாகதான் இதை பார்க்கவேண்டும். இன்னும் நாம் காட்டு மிராண்டிகளாகத்தானே சில விடயங்களில் வாழ்ந்து வருகிறோம்.அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-66881390066057853182009-06-23T11:35:29.028-04:002009-06-23T11:35:29.028-04:00Saravanan, P said...
எனது கணிப்பில் கமலாதாஸ் தற்க...Saravanan, P said...<br /><br />எனது கணிப்பில் கமலாதாஸ் தற்காலிக மனத்தடுமாற்றம் உள்ளவர். மெல்லியதான மனநிலைப் பிறழ்வும் உடையவர். அவரது பேச்சும் எழுத்தும் பகல்நேரக் குடிகாரரின் கருத்துக்களை ஒத்தவையே. ஒரு விதத்தில் கமலாதாஸ் காமம்சார்ந்த மனஅழுத்தக்காரர். அவருக்கு ஆண்துணையும் பெண்துணையும் ஏற்றாற்போல் அமையவில்லைபோலும். சுயபுணர்ச்சி எப்பவும் மனத்தடுமாற்றத்தை விளைவிக்கும். அவரது மனத்தடுமாற்றத்திற்கு அவரேதான் காரணம். அவர் சார்ந்த சமூகமோ மதமோ மொழியோ அல்ல. அவர் பெண்ணியத்திற்கு ஒரு கரும்புள்ளி. அவரது எழுத்துக்களைக் கவனிக்காமல் விடுவதே நவீனப் பெண்ணியத்திற்கு நல்லது.//<br /><br />இங்கே இந்த நண்பர், சுய புணர்ச்சி என்று எதைக் கூறுகிறார் என்று தெளிவாக தெரியவில்லை.<br /><br />சுய இன்பமா?<br />ஓரினச் சேர்க்கையா?<br /><br />சுய இன்பம் என்றால், அது மனத் தடுமாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது?<br />99%ஆண்களும், 85% பெண்களும் சுய இன்பம் பெறுபவர்களே ! இது அங்கி கரிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிபு. இவர்களுக்கெல்லாம் மனத் தடுமாற்றம் வந்தால்?<br /><br /><br />மற்றும் இதுவரை உள்ள அறிவியல் அறிவு சொல்வது, சுய இன்பம் எந்த கெடுதலும் அற்றது என்று.<br /><br />சுய இன்பம் பற்றி பேசுவது நம் சமூகத்துக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்ற கருத்தை வேண்டுமானால் சொல்லலாம். அதற்காக அது மனத் தடுமாற்றம் ஏற்படுத்துவது என்று பொய் தகவல் சொல்வது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது.<br /><br />பாலியல் சம்பந்தமாக பேசும் போது கொஞ்சம் துறை சார் அனுபவம் பெற்று பேசுவது உகந்தது, வெறுமனே வாசிப்பை மட்டும் பேசாமல்.<br /><br />இது ஏன் தாழ்மையான கருத்து , குறிப்பிட்ட அந்த நபரைப் போய்ச் சேரும் என்று நம்புகிறேன்.மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25258254263767663152009-06-23T11:04:19.972-04:002009-06-23T11:04:19.972-04:00"கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி"
இந்த தலை..."கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி"<br /><br />இந்த தலைப்பு குறிப்பது , ``கமலாதாஸ் என்பவர் சர்ச்சைகளை விரும்பி முரண் பட்ட கருத்துக்களை சொன்னவர். அவர் சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை சொன்னார் .``<br /><br />எனது தமிழ் அறிவின் படி இப்படித்தான் நினைத்தேன் !<br /><br />ஆனால் கட்டுரையை வாசிக்க வாசிக்க நான் நினைத்த தலைப்புக்கு முரண் பாடாக கட்டுரை இருப்பதைக் கண்டு மீண்டும் தலைப்பை ஆழமாக பார்த்த போதுதான் புரிந்தது, இந்த தலைப்பின் அர்த்தம் , சர்ச்சைகளால் காதலிக்கப்பட்டவர் கமலாதாஸ்.<br /><br />மன்னித்துக் கொள்ளுங்கள் என் தமிழறிவு மங்கி விட்டதால் ஏற்பட்ட பிழையாகவும் அது இருக்கலாம் .<br />ஆனால் தமிழ் வழக்கில் இரண்டு விதமாகவும் இந்த தலைப்பு எடுத்துக் கொள்ளப் படலாம். அதாவது நான் முன்பு நினைத்த கருத்தை சொல்வதற்கு இதே வசன அமைப்பை பயன்படுத்தலாம் , ஆனால் அது தப்பு.<br /><br />இதை நான் சொல்லவில்லை , சில நாட்களுக்கு முன் தமிழ்க் கூடல் என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியில் ஒரு அறிஞர் , பத்திரிகைகளில் இவ்வாறான தலைப்புக்கள் , பார்த்தவுடன் மக்களை கவரும் நோக்கத்தில் இடப்படுவதை சுட்டிக் காட்டி இருந்தார்.<br /><br />அதற்குப் பிறகுதான் நானே யோசித்தேன் , சகஜமாக நடக்கும் இந்தப் பிழைகளை.மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-70566257768547530742009-06-23T09:53:35.429-04:002009-06-23T09:53:35.429-04:00தமிழ்நதி நட்சத்திர வாழ்த்துக்கள்.
கருத்தியல் முரண...தமிழ்நதி நட்சத்திர வாழ்த்துக்கள்.<br /><br />கருத்தியல் முரண்கள் என்று பார்த்தால் இப்போதெல்லாம் பலருடைய பதிவுகளிற்கு எதிர்பதிவுகள் போட்டே தீரவேண்டியதாய் இருக்கிறது. <br /><br />இங்கே பிரச்சினையே ஏறக்குறைய விஜய், ரஜினி ஆகியோரின் தொண்டர்களைப் போல தனக்கும் ஒரு பெரும் கூட்டத்தை இப்போது சில எழுத்தாளர்கள் மெல்ல சேர்த்து வைத்திருப்பதுதான். இவர்கள் எழுதும் எதையும் அப்படியே மனதில் தன் கருத்தாக ஏற்றி வைத்துக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும் சிலருக்காக இப்படி மெனக்கெட்டு பதில் பதிவுகளை இட வேண்டியதாயிருக்கிறது உங்களுக்கு.நந்தாhttp://blog.nandhaonline.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-34216126202730646252009-06-23T07:56:52.095-04:002009-06-23T07:56:52.095-04:00உங்கள் டெம்ப்ளேட் வாசிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இரு...உங்கள் டெம்ப்ளேட் வாசிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது, அதனால் முழுவதும் வாசிக்கவில்லை, மீண்டும் முயற்சி செய்கிறேன். நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-35553148589154285182009-06-23T07:02:41.867-04:002009-06-23T07:02:41.867-04:00//அவருக்கு ஆண்துணையும் பெண்துணையும் ஏற்றாற்போல் அம...//அவருக்கு ஆண்துணையும் பெண்துணையும் ஏற்றாற்போல் அமையவில்லைபோலும். சுயபுணர்ச்சி எப்பவும் மனத்தடுமாற்றத்தை விளைவிக்கும். //<br /><br />இதற்கு முந்தைய பதிவில் “கூட்டுப்புணர்ச்சி”, இந்தப் பதிவில் “சுயபுணர்ச்சி”!!! ஒரு முடிவேட தான் திரியிறாரு “தங்கள் வாசகன் தமிழ் எழுத்தாளர்” சரவணன் :-))))))Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-23340638804373687902009-06-23T06:38:30.408-04:002009-06-23T06:38:30.408-04:00//பெண்ணியத்திற்கு ஒரு கரும்புள்ளி. அவரது எழுத்துக்...//பெண்ணியத்திற்கு ஒரு கரும்புள்ளி. அவரது எழுத்துக்களைக் கவனிக்காமல் விடுவதே நவீனப் பெண்ணியத்திற்கு நல்லது. //<br /><br />இதப் பார்டா :-)<br />தமிழ் எழுத்தாளர்ன்னு நிரூபிக்கிறாரே?<br />இன்னொரு கலாசார பெருச்சாளி ,,மன்னிக்க.. காவலாளி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-57743655777889768642009-06-23T06:37:14.568-04:002009-06-23T06:37:14.568-04:00//Kamala Suraiya (Kamala Das) was short -listed fo...//Kamala Suraiya (Kamala Das) was short -listed for the Nobel Prize for literature//<br /><br />இதை யாராவது ஜெமோ கிட்ட சொல்லியிருபபங்க. அதைப் படிச்சதுலேருந்து அவருக்கு மூலம் முத்திப் போய் இருக்க வழியில்லாமல் இப்படி கோட்டித்தனமா எழுதுவாரு. அதையும் படிச்சு வெளக்கம் வேற சொல்றீங்க பாருங்க.. நல்லா இருங்க!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-77930427440945045332009-06-23T06:13:55.075-04:002009-06-23T06:13:55.075-04:00யாருங்க இந்த 'தங்கள் வாசகன்" சரவணன்? அப்ப...யாருங்க இந்த 'தங்கள் வாசகன்" சரவணன்? அப்பப்ப வந்து அலப்பறையக் கொடுக்கிறாரு? தமிழ் ரைட்டராமாம்!மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-57302535547845640092009-06-23T05:33:55.782-04:002009-06-23T05:33:55.782-04:00ஜெயமோகன் போன்ற அதீ மேதாவிகள் இதுபோன்ற கருத்துக்கள்...ஜெயமோகன் போன்ற அதீ மேதாவிகள் இதுபோன்ற கருத்துக்கள் சொல்லாமல் இருந்தால் தான் வியப்பு!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-84042656771603235842009-06-23T05:27:51.885-04:002009-06-23T05:27:51.885-04:00இப்போதைக்கு பைத்தியக்காரனுக்கு மட்டும் பதிலளிக்கி...இப்போதைக்கு பைத்தியக்காரனுக்கு மட்டும் பதிலளிக்கிறேன்.<br /><br />நண்பரே,<br /><br />நீங்கள் சொன்னது உண்மை. இந்தக் கட்டுரை மேலோட்டமானதே. அதற்குக் காரணம் நானல்ல என்பதை இங்கே அழுத்தமாகப் பதிவுசெய்ய விரும்புகிறேன். கமலாதாஸ் பற்றிய கட்டுரையை எழுதி வாசிக்கும்படி வால்பாறை கூட்டத்தை ஒழுங்கமைத்தவர்கள் கவிஞர் மாலதி மைத்ரியை அழைத்திருந்தார்கள். அவருக்கு வேறு வேலைகள் இருந்தபடியால் அவரால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியவில்லை. கூட்டம் நடைபெற்றது சனிக்கிழமை காலை. வியாழக்கிழமை இரவு பத்து மணியளவில் செல்மா பிரியதர்சன் தொலைபேசியில் என்னை அழைத்து, 'கமலாதாஸ் பற்றிக் கட்டுரை எழுதி வாசிக்கமுடியுமா?'என்று கேட்டார். நான் சொன்னேன் 'அவரது படைப்புகளை நான் முழுவதுமாக வாசித்ததில்லை. ஒரு கட்டுரை எழுதுவதானால் அவரைப் பற்றிய விபரங்களைச் சேகரித்துவிட்டே எழுத ஆரம்பிக்கவேண்டும்"என்று. அவர் தொடர்ந்து வற்புறுத்தினார். வேறு வழியின்றி, நான் ஒப்பேற்றுவதற்கு ஒத்துக்கொண்டேன். அதன்படி முழுமையற்ற ஒரு கட்டுரையையும் எழுதி கொஞ்சம் குற்றவுணர்வோடே வாசித்தேன். அப்படி குறைந்த கால அவகாசத்துடன் எதற்கும் ஒத்துக்கொள்ளக் கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். என் தவறுதான். மன்னிக்கவும். ஆம்... நீங்கள் சொன்னதுபோல கமலாதாஸைப் பற்றி ஒரு கட்டுரையை நீங்கள் ஏன் எழுதக்கூடாது நண்பரே? வாசிக்க ஆவலோடிருக்கிறேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-79648241098116325272009-06-23T05:18:53.094-04:002009-06-23T05:18:53.094-04:00தமிழ்நதி,
கமலாதாஸ் தொடர்பான ஜெயமோகன் பதிவுடன் எனக...தமிழ்நதி,<br /><br />கமலாதாஸ் தொடர்பான ஜெயமோகன் பதிவுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதை பதிவு செய்துவிட்டே இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன்.<br /><br />தவறாக எண்ண வேண்டாம். இந்தப் பதிவு ஏமாற்றத்தை அளிக்கிறது. கமலாதாஸ் @ மாதவிக்குட்டியின் படைப்புகள் தொடர்பான உரையாடல் இந்தப் பதிவில் நிகழ்த்தப்படவில்லை. <br /><br />கவிஞர் சுகுமாரன் உட்பட பலரும் அவரது கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனாலும் நான் அறிந்தவரை கமலாதாஸ் குறித்த சமீபத்திய தமிழ் அஞ்சலி கட்டுரை அல்லது பிரதிகளில் அவரது படைப்புகள் குறித்து அதிகமும் உரையாடப்படவேயில்லை.<br /><br />இத்தனைக்கும் 'நக்கீரன்' பதிப்பகத்திலிருந்து வெளிவரும் 'இனிய உதயம்' இதழில் சுரா, அவரது சில படைப்புகளை தமிழாக்கம் செய்திருக்கிறார். சுராவின் தமிழாக்கத்தில் எனக்கு கேள்விகள் உண்டு. என்றாலும் இடைநிலை வாசகர்களிடம் பரவலாக கமலாவின் படைப்புகளை கொண்டு சென்றார் என்பதில் மகிழ்வும் உண்டு.<br /><br />என்றாலும் பெண் எழுத்தாளர், சர்சைக்குரிய எழுத்தாளர், மதம் மாறினார், பாலியல் விஷயங்களை கையாண்டார்... 'மாத்ரூ பூமி' ஊடகத்தை சேர்ந்தவர்... என்பதான பொதுக் குறிப்புகள் எழுதப்படுகிறதே தவிர, அழுத்தமாக அவரது படைப்புகள் விமர்சிக்கப்படவில்லை. <br /><br />மலையாள ஊடகங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால், தமிழ் ஊடகங்களில் அல்லது பதிவுகளில் (திரும்பவும் சொல்கிறேன் - நான் அறிந்த வரை) தெரிந்தோ, தெரியாமலோ கமலாதாஸ், அவருக்கான அடையாளங்களின்றி கொச்சையாக அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது பிரதிகள் சுட்டிக் காட்டும் அல்லது கலைத்துப் போடும் அழகியல் அல்லது அ அழகியல் அல்லது எதிர் அழகியல் குறித்த விஷயங்கள் வாசகப் பரப்பை சென்றடையாமல் தடுத்து நிறுத்துப்படுகிறது. இதனால் பயனடைபவர்கள் யார்?<br /><br />இந்த சூழலில், பரந்த வாசிப்பனுபவம் உள்ள நீங்களும், கமலாதாஸின் பயோடேட்டா குறித்ததாக மட்டுமே பதிவை அமைத்தது வருத்தத்தை அளிக்கிறது.<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்<br /><br />பின் குறிப்பு: இந்தப் பின்னூட்டத்தில் நீங்கள் என்று வரும் இடங்களில் உங்களை மட்டுமல்ல, என்னையும் இணைக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். கமலாதாஸின் படைப்புகளில் சிலவற்றையாவது வாசித்திருக்கும் பைத்தியக்காரன், இதுவரை அவரைக் குறித்து எந்தப் பதிவும் எழுதவில்லை. அது ஆண் என்பதலாலா அல்லது வேறு ஏதேனும் காரணமா? <br /><br />மவுனமும் அதிகாரத்துக்கு துணை போகக் கூடியதுதானே...கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-22209957272266299572009-06-23T05:18:50.931-04:002009-06-23T05:18:50.931-04:00தமிழ்நதி,
கமலாதாஸ் தொடர்பான ஜெயமோகன் பதிவுடன் எனக...தமிழ்நதி,<br /><br />கமலாதாஸ் தொடர்பான ஜெயமோகன் பதிவுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதை பதிவு செய்துவிட்டே இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன்.<br /><br />தவறாக எண்ண வேண்டாம். இந்தப் பதிவு ஏமாற்றத்தை அளிக்கிறது. கமலாதாஸ் @ மாதவிக்குட்டியின் படைப்புகள் தொடர்பான உரையாடல் இந்தப் பதிவில் நிகழ்த்தப்படவில்லை. <br /><br />கவிஞர் சுகுமாரன் உட்பட பலரும் அவரது கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனாலும் நான் அறிந்தவரை கமலாதாஸ் குறித்த சமீபத்திய தமிழ் அஞ்சலி கட்டுரை அல்லது பிரதிகளில் அவரது படைப்புகள் குறித்து அதிகமும் உரையாடப்படவேயில்லை.<br /><br />இத்தனைக்கும் 'நக்கீரன்' பதிப்பகத்திலிருந்து வெளிவரும் 'இனிய உதயம்' இதழில் சுரா, அவரது சில படைப்புகளை தமிழாக்கம் செய்திருக்கிறார். சுராவின் தமிழாக்கத்தில் எனக்கு கேள்விகள் உண்டு. என்றாலும் இடைநிலை வாசகர்களிடம் பரவலாக கமலாவின் படைப்புகளை கொண்டு சென்றார் என்பதில் மகிழ்வும் உண்டு.<br /><br />என்றாலும் பெண் எழுத்தாளர், சர்சைக்குரிய எழுத்தாளர், மதம் மாறினார், பாலியல் விஷயங்களை கையாண்டார்... 'மாத்ரூ பூமி' ஊடகத்தை சேர்ந்தவர்... என்பதான பொதுக் குறிப்புகள் எழுதப்படுகிறதே தவிர, அழுத்தமாக அவரது படைப்புகள் விமர்சிக்கப்படவில்லை. <br /><br />மலையாள ஊடகங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால், தமிழ் ஊடகங்களில் அல்லது பதிவுகளில் (திரும்பவும் சொல்கிறேன் - நான் அறிந்த வரை) தெரிந்தோ, தெரியாமலோ கமலாதாஸ், அவருக்கான அடையாளங்களின்றி கொச்சையாக அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது பிரதிகள் சுட்டிக் காட்டும் அல்லது கலைத்துப் போடும் அழகியல் அல்லது அ அழகியல் அல்லது எதிர் அழகியல் குறித்த விஷயங்கள் வாசகப் பரப்பை சென்றடையாமல் தடுத்து நிறுத்துப்படுகிறது. இதனால் பயனடைபவர்கள் யார்?<br /><br />இந்த சூழலில், பரந்த வாசிப்பனுபவம் உள்ள நீங்களும், கமலாதாஸின் பயோடேட்டா குறித்ததாக மட்டுமே பதிவை அமைத்தது வருத்தத்தை அளிக்கிறது.<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்<br /><br />பின் குறிப்பு: இந்தப் பின்னூட்டத்தில் நீங்கள் என்று வரும் இடங்களில் உங்களை மட்டுமல்ல, என்னையும் இணைக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். கமலாதாஸின் படைப்புகளில் சிலவற்றையாவது வாசித்திருக்கும் பைத்தியக்காரன், இதுவரை அவரைக் குறித்து எந்தப் பதிவும் எழுதவில்லை. அது ஆண் என்பதலாலா அல்லது வேறு ஏதேனும் காரணமா? <br /><br />மவுனமும் அதிகாரத்துக்கு துணை போகக் கூடியதுதானே...கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.com