tag:blogger.com,1999:blog-34103693.post851325089601825944..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: ஆரத்திதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-34103693.post-35794128830440763382011-12-22T09:47:50.321-05:002011-12-22T09:47:50.321-05:00மனதை நெகிழ வைத்த கதை. கதையை படித்த பின் எதையோ இழந்...மனதை நெகிழ வைத்த கதை. கதையை படித்த பின் எதையோ இழந்தது மாதிரி ஒரு உணர்வு.Madurai Tamil Guyhttp://avargal-unmaigal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-69904627646744938932007-11-23T22:25:00.000-05:002007-11-23T22:25:00.000-05:00நான் இப்படிச் சொல்வதற்காக என்னைக் கோவிக்க கூடாது...நான் இப்படிச் சொல்வதற்காக என்னைக் கோவிக்க கூடாது. நான் நினைக்கிறேன். இது ஒரு வழக்கமான கதைகள் போலவே இருக்கின்றது என்று. இப்படியான பல கதைகளை நான் வாசித்து இருக்கிறேன். வெவ்வேறு கதைப்போக்குகளில். இதை வாசிக்கும் போது எனக்கு அண்மையில் ஊடறுவில் வாசித்த சாரங்கா தயாநந்தனின் கறுப்பு வர்ணம் கதை ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் குழந்தையின்மை குறித்து பேசப்படுகின்ற ஒரு கதைதான். அதற்காக ஒரு பிரச்சனையை ஒருவர் தவிர மற்றவர் பேசக்கூடாது என்று சொல்ல வரவில்லை.<BR/><BR/>பெண் எழுத்தாளர்கள் எல்லோரும் பெண்களின் பிரச்சனைகளையே எழுதி ஒரே சுற்றுக்குள் மாட்டிக் கொள்வதான சொல்லில் இருந்து நீங்கள் எழுதிய அந்த எசமாடன் கேட்கட்டும் என்ற கதைகள் வேறுபடுத்தி பார்க்க கூடியதுதானே. எனவே இதை வலிந்து எழுதியிருக்க கூடுமோ என நான் யோசிக்கும் கணத்தில் "பெயர்கள் மட்டுமே கற்பனை" என்ற அடிக்குறிப்பு குழப்புகின்றது.<BR/><BR/>அதே போல் மோகன்தாஸ் சொன்ன //"உங்கள் சிறுகதை தொடர்ச்சியாக படிக்கப்பட்டதின் காரணம் அதில் இருந்த ஒரு சஸ்பென்ஸ் என்று தான் சொல்வேன், பலகதைகள் படிக்கத்தொடங்கி பாதியில் விட்டுவிட்டு ஓடிவிடுவேன் அப்படியில்லாமல் ஏன் இப்படி நடக்கிறது அந்தப் பெண்ணிற்கு என்பதற்கான விடையை நோக்கி கதை நகர்கிறது.<BR/><BR/>ஆனால் படித்து முடித்ததும், அந்தப் பெண்ணின் ஏழைத்தனம் பற்றிய விவரிப்புகள் வாசகனை குழப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டவையாகத் தோன்றுகிறது. <BR/><BR/>எப்படியென்றால் முடிவில் நீங்கள் சொல்லியிருக்கும் குழந்தை இல்லாமல் பற்றிய கேள்விகள் அந்தப் பெண்ணிற்கு தான் ஏழை என்பதால் எழும் கேள்விகளுக்கு முன்னமே வரும் என்று நினைக்கிறேன். ஏன் அப்படி நினைக்கிறேன் என்று கடைசியில் சொல்கிறேன்.<BR/><BR/>இரண்டாம் முறை படிக்கும் பொழுது, "“என்னை ஏன் இன்னும் கூப்பிடவில்லை…? ஒருவேளை… ச்சே!”எழுந்த சந்தேகத்தை அடித்து விரட்டினாள்." இந்த வரிகளில் வரும் எண்ணமான 'குழந்தைப் பேரின்மை' முதல் தரம் படித்தப் பொழுது வராமல் போனது மட்டுமல்லாமல், தொடர்ச்சியான "பதவி பணம் என்று வாழ்வான வாழ்வு வந்தபோதும் 'வா'என்றழைக்கும் அந்த வாஞ்சை மட்டும் மாறியதேயில்லை. " வரிகள் ஏழைமையைக் காரணமாக அந்தப் பெண் நினைக்கிறாளா என்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது// என்ற வரிகளை என் பெயரிலே மீண்டும் சொல்ல ஆசைப்படுகின்றேன்.ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-78157469039338269342007-11-23T05:19:00.000-05:002007-11-23T05:19:00.000-05:00எனக்குப் பெயர்கள் கூட கற்பனை இல்லை.எனக்குப் பெயர்கள் கூட கற்பனை இல்லை.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-50030704199915383052007-11-20T10:18:00.000-05:002007-11-20T10:18:00.000-05:00மோகன்தாஸ்!எனது சிறுகதையொன்றுக்கு அண்மையில் வந்த ...மோகன்தாஸ்!எனது சிறுகதையொன்றுக்கு அண்மையில் வந்த நீளமான பின்னூட்டம் இதுதான்:) 'பாரதி ஏழை என்பதால் ஒதுக்கப்படுகிறாள்'என்று வாசிப்பவர்களை நினைக்க வைத்தது திட்டமிட்டு நிகழ்ந்ததல்ல; அவளுக்கு 'அண்ணன்'மீதிருந்த அபிமானத்தை வெளிக்காட்டுவதற்காக வளர்த்திய பத்திகளில் அவருடைய பெருந்தன்மையைக் குறிக்க எழுதியவை அவ்வாறு அமைந்துவிட்டன. நீங்கள் சொல்வதுபோல... எங்களிடம் ஒரு குறை இருந்தால் (அது உண்மையில் குறை அல்ல. சமூகத்தினால் குறை எனக் கருதப்படுவது) எதேச்சையான நிகழ்வுகளைக் கூட நாம் அந்தக் காரணத்தினாலேயே புறக்கணிக்கப்படுகிறோம் என நினைத்துக் கொள்வது நிறையத் தடவை அநேகருக்கு நடந்திருக்கும். உதாரணமாக, 'ஈழத்தமிழர்கள் என்பதனால் எங்களை ஒதுக்குகிறார்கள்' என்று நாங்கள் நினைத்துக்கொள்வதனைச் சொல்லலாம்.<BR/><BR/>இவ்வகையில் ஆண்கள் ஒதுக்கப்படுவது குறைவு என்பதே இன்னமும் என் கருத்தாக இருக்கிறது. மனைவியை இழந்தவருக்கென்று பரவலாக புழக்கத்திலுள்ள ஒரு சொல் இல்லை. ஆனால், விதவை என்பது எவ்வளவு 'தாராளமாக'புழங்குகிறது. மனைவியை இழந்தவரை 'தபுதாரன்'என்று சொல்வார்களாம். அந்தச் சொல்லை யார் உச்சரிக்கவும் நான் கேட்டதில்லை. வருகைக்கும் ஆழ்ந்து வாசித்து தெரிவித்த கருத்துக்கும் நன்றி மோகன்தாஸ்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-54554893062905248622007-11-19T08:14:00.000-05:002007-11-19T08:14:00.000-05:00கவிதையைப் போலில்லாமல் கதைக்குள் இயல்பாய் டைவ் அடித...கவிதையைப் போலில்லாமல் கதைக்குள் இயல்பாய் டைவ் அடித்துவிட முடிவதால் சிறுகதைகள் படிப்பதில் ஆர்வம் உண்டு.<BR/><BR/>உங்கள் சிறுகதை தொடர்ச்சியாக படிக்கப்பட்டதின் காரணம் அதில் இருந்த ஒரு சஸ்பென்ஸ் என்று தான் சொல்வேன், பலகதைகள் படிக்கத்தொடங்கி பாதியில் விட்டுவிட்டு ஓடிவிடுவேன் அப்படியில்லாமல் ஏன் இப்படி நடக்கிறது அந்தப் பெண்ணிற்கு என்பதற்கான விடையை நோக்கி கதை நகர்கிறது.<BR/><BR/>ஆனால் படித்து முடித்ததும், அந்தப் பெண்ணின் ஏழைத்தனம் பற்றிய விவரிப்புகள் வாசகனை குழப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டவையாகத் தோன்றுகிறது. <BR/><BR/>எப்படியென்றால் முடிவில் நீங்கள் சொல்லியிருக்கும் குழந்தை இல்லாமல் பற்றிய கேள்விகள் அந்தப் பெண்ணிற்கு தான் ஏழை என்பதால் எழும் கேள்விகளுக்கு முன்னமே வரும் என்று நினைக்கிறேன். ஏன் அப்படி நினைக்கிறேன் என்று கடைசியில் சொல்கிறேன்.<BR/><BR/>இரண்டாம் முறை படிக்கும் பொழுது, "“என்னை ஏன் இன்னும் கூப்பிடவில்லை…? ஒருவேளை… ச்சே!”எழுந்த சந்தேகத்தை அடித்து விரட்டினாள்." இந்த வரிகளில் வரும் எண்ணமான 'குழந்தைப் பேரின்மை' முதல் தரம் படித்தப் பொழுது வராமல் போனது மட்டுமல்லாமல், தொடர்ச்சியான "பதவி பணம் என்று வாழ்வான வாழ்வு வந்தபோதும் 'வா'என்றழைக்கும் அந்த வாஞ்சை மட்டும் மாறியதேயில்லை. " வரிகள் ஏழைமையைக் காரணமாக அந்தப் பெண் நினைக்கிறாளா என்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது.<BR/><BR/>நான் இதை ஒரு குறையாகக் கூட சொல்லவில்லை, இதைத்தான் செய்ய நினைத்தீர்களா என்ற கிளாரிஃபிகேஷனுக்காகக் கேட்கிறேன்<BR/><BR/>----------------------<BR/><BR/>என்னுடைய நெருங்கிய உறவினர்களில் ஒரு தம்பதிக்கு குழந்தை கிடையாது, நானும் அந்த தம்பதிகளும் சேர்ந்து சென்று வந்த சில நிகழ்ச்சிகளின் பின்னர் நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயத்தை அவர்கள், தங்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் அப்படி நடந்தது என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனால் நிச்சயமாகச் சொல்லமுடியும் குழந்தை இல்லாத தம்பதிகள் ஏழையாக இருந்தாலும் இந்த விதத்தில் அவமதிப்பு என்று நடக்கும் பட்சத்தில் முதலில் தங்களுடைய குழந்தையின்மையை குத்திக்காட்டுவதாகத்தான் நினைப்பார்கள்.<BR/><BR/>-------------------------<BR/><BR/>//அவர்கள் பெண்கள் அளவிற்கு உதாசீனப்படுத்தப்படுவதில்லை. //<BR/><BR/>என்ன சொல்றதுன்னு தெரியலை, நான் சொன்ன அந்தத் தம்பதிகளில் ஆண் என்னுடன் நெருக்கமாகப் பழகும் நபர்களில் ஒருவர். <BR/><BR/>அவருடன் பழகும் நண்பர்களையும் நன்றாகத் தெரியும் என்பதால் சொல்கிறேன். நாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக அவருடன் பழகினாலும் சில சமயங்களில் நாம் சொல்லிவிடும் வாக்கியங்கள், அவரால் தவறாகப் புரிந்துகொள்ளமுடியும்படி அமைந்துவிடும். <BR/><BR/>இங்கே நீங்கள் உதாசீனப்படுத்துவதை மற்றவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்வதாக எடுத்துக்கொண்டால் இங்கே சடங்கு போல் ஆண்களுக்கு நிறைய இருக்கிறது உதாரணத்திற்கு குழந்தைக்கு ஏதாவது விளையாட்டுப் பொருள் வாங்கப்போகும் பொழுது இந்த மேற்கூரிய ஆண் தவிர்க்கப்படுகிறார் என்றால் அது எந்தக் காரணத்திற்காக இருந்தாலும் அந்த நபர் தன்னை உதாசீனப்படுத்துகிறார் என்றுதான் நினைக்கிறார்.<BR/><BR/>பெண்களுக்கு சடங்கு போல் தனியொரு உலகம் இருந்ததென்றால் ஆண்களுக்கும் இதைப் போன்று வேறு உலகம் உண்டு. இங்கே உதாசீனப்படுத்துவது முற்றிலுமாகத் தடுக்கப்படவேண்டுமே ஒழிய ஆணுக்கு குறைவு என்பது சரியான வாதமாகயிருக்காது.<BR/><BR/>//விதவைகளுக்கும் இதே விதிதான். 'தாலியறுந்தவள்'என்று தள்ளிவைத்துவிடுவார்கள். முற்போக்கு முற்போக்கு என்று யாராவது பேசக்கேட்டால்.... 'போடா புண்ணாக்கு.... முதல்ல இதை மாத்து'என்றே சொல்லத் தோன்றுகிறது.//<BR/><BR/>;) எல்லோருக்கும் அவரவர்களுக்கான preference இருக்கும்ங்க, வேறுயாரையாவது கேட்டீர்கள் என்றால் "போடா புண்ணாக்கு, 1,00,000 லட்சம் விவசாயிகள் சாவதை தடு" என்று சொல்லக்கூடும். நான் விதவைகளை ஒதுக்குவதை சரியென்று சொல்லவில்லை preference பற்றி மட்டும் சொல்கிறேன்.<BR/><BR/>-------------------------<BR/><BR/>மற்றபடிக்கு நல்ல கதை, சிறுகதைக்கான ஃபார்மேட்டில் இருப்பதாகத்தான் நினைக்கிறேன். நீங்கள் கதையில் சொல்லியிருக்கும் விஷயத்தை நேரில் நிறைய முறை பார்த்தவன் என்பதால் என்னால் பெண்ணின் வருத்தத்தை உணரமுடிகிறது. கதை படிக்கத்தூண்டும் வகையில் இருக்கிறது.Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-2092109286092519942007-11-19T01:54:00.000-05:002007-11-19T01:54:00.000-05:00வழக்கம்போல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசிகன்...வழக்கம்போல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசிகன்.<BR/><BR/>பத்மா!<BR/><BR/>"குழந்தைப்பேறு இல்லா ஆண்களுக்கு எந்த வித உதாசீனங்கள் இருக்கும்?" <BR/><BR/>அவர்கள் பெண்கள் அளவிற்கு உதாசீனப்படுத்தப்படுவதில்லை. குழந்தைப் பேறின்மை என்பது ஒரு பெண்ணின் உடல்சார்ந்த விடயம்... அதை கலாச்சாரம்,பண்பாடு என்பனவற்றோடு பொருத்தி மேலும் புண்படுத்துவதுதான் கவலைதருகிறது.<BR/><BR/>விதவைகளுக்கும் இதே விதிதான். 'தாலியறுந்தவள்'என்று தள்ளிவைத்துவிடுவார்கள். முற்போக்கு முற்போக்கு என்று யாராவது பேசக்கேட்டால்.... 'போடா புண்ணாக்கு.... முதல்ல இதை மாத்து'என்றே சொல்லத் தோன்றுகிறது.<BR/><BR/>சூரியா!நீங்கள் சொன்னது உண்மையே. முதலில் எழுதியது உண்மையில் கதையின் 'முதல்'வடிவம். அதற்கு மெருகேற்றாமல் அப்படியே வலையேற்றினேன். இப்போது திருத்தியிருக்கிறேன். வலையில் வைத்தே மேலும் திருத்த உத்தேசம். ஏனென்றால், எனது சிறுகதைகளை முழுத்தொகுப்பாக வெளியிட ஒரு பதிப்பகத்தார் என்னோடு தொடர்புகொண்டிருக்கிறார்கள். இனி கொஞ்சநாளைக்கு அதில்தான் கவனம் குவியும். கூர்ந்த விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-37001622535332018342007-11-18T17:47:00.000-05:002007-11-18T17:47:00.000-05:00அன்பு நண்பி,ஏனைய தங்கள் படைப்புகளிலிருந்து இது கொஞ...அன்பு நண்பி,<BR/>ஏனைய தங்கள் படைப்புகளிலிருந்து இது கொஞ்சம் தரம் குறைந்துவிட்டதுபோல் என் இரசனைக்குப் படுகிறது. கதையின் உள்ளடக்கம் ஓகே. அந்த உத்திமுறையும்..மொழிநடையுந்தான்...என்னை ஈர்க்கவில்லைப் போலும், எல்லாப் படைப்புகளுமே ஈர்த்துவிடுமா என்ன? தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகளுடனும் நன்றிகளுடனும்...!sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-30236290418759369512007-11-18T13:08:00.000-05:002007-11-18T13:08:00.000-05:00சம்பவங்கள் அனைத்துமே பலமுறை கேட்டு, படித்தது என்றா...சம்பவங்கள் அனைத்துமே பலமுறை கேட்டு, படித்தது என்றாலும் நிறுத்தாமல் படிக்க வைத்த பதிவு. அருமை. குழந்தை தங்கவில்லை என்று சொன்னௌடனேயே புரிந்து போகிறது மொத்த பதிவும். ஆரத்தி போஒன்ற சடங்குகள் ஆண்களால் செய்யப்படுவதில்லை, இருந்தால் குழந்தைப்பேறு இல்லா ஆண்களுக்கு எந்த வித உதாசீனங்கள் இருக்கும்? இல்லை, அப்போது இந்த மூடநம்பிக்கைகள் வழக்கொழிந்து போகுமா?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15054348802957593322007-11-18T09:23:00.000-05:002007-11-18T09:23:00.000-05:00படித்து முடித்ததும்,மனசுக்குள் ஏதோ ஒரு பாரம்.நல்லா...படித்து முடித்ததும்,மனசுக்குள் ஏதோ ஒரு பாரம்.நல்லா எழுதியிருக்கிங்க தமிழ்நதி..அந்த பெண் குறைவில்லா மழலை செல்வம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-45775890472717736262007-11-18T06:20:00.000-05:002007-11-18T06:20:00.000-05:00அப்பாஸ்! உங்கள் ஆவேசமான கேள்விகளைப் பார்த்து 'அப்ப...அப்பாஸ்! உங்கள் ஆவேசமான கேள்விகளைப் பார்த்து 'அப்படிப் போடு அருவாளை'என்று நினைத்துக்கொண்டேன். அவ்வாறான சூழ்நிலையில் பாரதி எப்படிச் செயற்பட்டிருப்பார் என்று, அவரைக் கண்டுபிடிக்கமுடிந்தால் கேட்டுச் சொல்கிறேன். அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் இன்னொருவரை அப்படி நடத்தமாட்டார் என்பதே எனது அனுமானம்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-70057868006786995342007-11-18T04:01:00.000-05:002007-11-18T04:01:00.000-05:00இம்மாதிரியான நேரங்களிள்தான், நம்பிக்கைக்களும் பகுத...இம்மாதிரியான நேரங்களிள்தான், நம்பிக்கைக்களும் பகுத்தறிவும் நேர் எதிர் திசையில். இங்கு அண்ணனை குறை கூறுவது சரியாகுமா? பாரதி அண்ணனுடைய இடத்தில் இருந்திருந்தால் எவ்வாரு செயல்பட்டிருந்திருப்பார்?<BR/><BR/>இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பாரதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அப்பெண்ணிற்கு சாமத்தியச் சடங்கு நடைபெறும்போது, ஒரு உறவுப் பெண்மணி திருமணமாகி 4 ஆண்டுகள் குழந்தைப்பேரு இல்லாமல் இருந்தால், அவரை பாரதி எவ்வாரு நடத்துவார்?<BR/><BR/>ஓரு வேலை அந்த அண்ணன் ஏலையாக இருந்திருந்தால் எவ்வாரு செயல்பட்டிருந்திருப்பார்?<BR/><BR/>இங்கு அண்ணனுடை பெருளாதார வசதியும் அவரை இவ்வாரு செயல்படவைத்ததாக காண்பிக்கப்பட்டுள்ளது.அப்பாஸ் Abbashttps://www.blogger.com/profile/07717406641973332334noreply@blogger.com