tag:blogger.com,1999:blog-34103693.post8828942085654337083..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: ‘குற்றவுணர்வின் மொழி’: ஒரு கவிதை அனுபவம்தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-34103693.post-77886291809081205982008-01-18T07:28:00.000-05:002008-01-18T07:28:00.000-05:00அன்பு நண்பர்களுக்கு, நான்கு நாட்களாக இணையத்தொடர்ப...அன்பு நண்பர்களுக்கு, நான்கு நாட்களாக இணையத்தொடர்பு கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறது. அதனால் உங்கள் பின்னூட்டங்களை உடனடியாகப் போடமுடியாமற் போயிற்று.<BR/><BR/>நன்றி கிருத்திகா! கவிதை மிக அழகும் ஆழமும் நிறைந்த மொழிவளமுடையது.(எல்லாக் கவிதைகளுமல்ல:)) இனி முயற்சித்துப் பாருங்கள்.<BR/><BR/>மஞ்சூர் ராசா!அறிமுகப்படுத்தினேனா... அது சரி...உருவான தருணங்கள் தாங்கள் அறியாததா? ம்... 'வெளி'என்ற சொல் தனித்தனிக் கவிதைகளாகப் பார்க்கும்போது உறுத்தவில்லை என்று நானே குறிப்பிட்டிருக்கிறேன். தொகுப்பாகப் பார்க்கும்போது வேறு வேறு தொனிப்பொருளில் வந்தாலும்... ம்... கவிஞரே அறிவார்.<BR/><BR/>சித்தார்த்! உண்மையைச் சொன்னால் எனக்கு 'முகில் சித்திரங்கள்' ஏனையவற்றோடு ஒப்பிடும்போது ஈர்க்கவில்லை. யூமா வாசுகியின் வரிகளைப் பற்றி எழுதவேண்டுமென நினைத்திருந்து நினைத்திருந்து மறந்தே போயிற்று. அதுவும் பாம்பாட்டிச்சித்தனின் ஆதர்சக் கவிஞரை எப்படி மறந்தேன்...? இணையத்தொடர்பு அறுந்ததால் ஞாபகத்தந்திகளும் அறுந்தனவோ என்னவோ...<BR/><BR/>முத்துலட்சுமி! ஆம் கவிதை பெரும்பாலும் தன்வெளிப்பாடுதான். கதைகள், கட்டுரைகள் வேண்டுமானால் புனைவாக இருக்கலாம்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலா. புத்தகக் கண்காட்சியும் முடிந்தாயிற்று. நியூ புக் லான்ட்ஸ் இல் இந்தத் தொகுப்பு கிடைக்கும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-86013211594077523322008-01-16T13:51:00.000-05:002008-01-16T13:51:00.000-05:00//மிகவும் அகவயம்சார்ந்த மொழிவெளிப்பாடாகிய கவிதையை ...//மிகவும் அகவயம்சார்ந்த மொழிவெளிப்பாடாகிய கவிதையை வாசித்து, அது நமக்குள் கடத்தும் அற்புதானுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் நிறுத்திக்கொள்வதே அதற்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கமுடியும்?/<BR/><BR/>வெகு நிச்சயமாக வாசிக்க தூண்டும்<BR/>நூல் அறிமுகம்..விமலாhttps://www.blogger.com/profile/11048970983793552883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-51516873888013255912008-01-16T13:10:00.000-05:002008-01-16T13:10:00.000-05:00‘ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது அதை எழுதியவனை அல்...‘ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது அதை எழுதியவனை அல்லது எழுதியவளை வாசிப்பதுபோலவே இருக்கிறது’என்பது நாவலுக்கும் சிறுகதைக்கும் பொருத்தமற்றதெனத் தோன்றலாம். ஆனால், கவிதைகளுக்கல்ல. கவிதைகள் பெரிதும் எழுதுபவனின்-எழுதுபவளின் வாக்குமூலமாக அமைந்துவிடுதலே இயல்பு//<BR/><BR/>நதி சிலசமயம் இது உங்களைப்பற்றிய கவிதையா என்று கேட்டால் பதில் சொல்லாமல் இருக்கவே புரியக்கூடாத வகையில் வார்த்தைகளை அடுக்கி கவிதை தோன்றுமாக்கும் எனக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-36748147052394270052008-01-16T07:49:00.000-05:002008-01-16T07:49:00.000-05:00வணக்கம் தமிழ்.குற்றவுணர்வின் மொழி என் மனதிற்கு மிக...வணக்கம் தமிழ்.<BR/><BR/>குற்றவுணர்வின் மொழி என் மனதிற்கு மிக அருகில் இருக்கும் ஓர் கவிதை தொகுப்பு. அது குறித்த பதிவிற்கு நன்றி தமிழ். <BR/><BR/>தாங்கள் கட்டுரை நெடுக பயன்படுத்தியுள்ள மேற்கோள்கள் தங்களின் ரசனையையும் தெரிவையும் காட்டுகின்றன. <BR/><BR/>நீங்கள் சொல்லாமல் விட்ட இரண்டு விஷயங்களை சொல்ல வேண்டும். தொகுப்பில் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்றாக எனக்கு பட்ட முகில் சித்திரம். மற்றது, தொகுப்பினைக் குறித்த கவிஞர் யூமா. வாசுகியின் வரிகள்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-25267850342991665972008-01-16T07:19:00.000-05:002008-01-16T07:19:00.000-05:00குற்றவுணர்வின் மொழி என்ற இந்தக் கவிதைத்தொகுப்பிலுள...குற்றவுணர்வின் மொழி என்ற இந்தக் கவிதைத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளின் அனுபவங்களை சொல்கின்றன என்பதே உண்மை. <BR/><BR/>உங்கள் விமர்சனம் உங்களுடைய வாசிப்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை. <BR/><BR/>வெளிப்படுத்துகிறது என்று எழுதுகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வெளி என்ற சொல் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. வெளி பல கவிதைகளின் ஊடாக வருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு கவிதையையும் தனித்தனிக் கவிதையாக பார்க்கையில் இந்த முரண் உங்களுக்கு தோன்றாது. மேலும் இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளில் உள்ள வெளி என்னும் சொல் சரியான இடங்களில் சரியாகவே பொருந்தியிருக்கிறது என்றே நினைக்கிறேன்.<BR/><BR/>வித்தியாசமான கோணத்தில் அனைத்துக்கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகளின் உலகம் பற்றி:<BR/><BR/>''ஸ்தம்பித்த வாகனங்களிடையே<BR/>தளிர்நடை போட்டு<BR/>விளையாட்டின் சுவாரசியத்தில்<BR/>வீதியில் விட்டெறிந்த<BR/>பூமிப்பந்தை மீட்டுத்திரும்புகிறது<BR/>குழந்தை<BR/>"<BR/><BR/>என்னும் கவிதையை குறிப்பிடலாம்.<BR/><BR/>நல்லதொரு தொகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-54629064949011086152008-01-16T06:36:00.000-05:002008-01-16T06:36:00.000-05:00மிகச்சிறந்த அறிமுகம், பொதுவாக கனமான கட்டுரைகளுக்கு...மிகச்சிறந்த அறிமுகம், பொதுவாக கனமான கட்டுரைகளுக்கு முக்கியத்துவமளிப்பது என் வழக்கம், பின் கதைகள்...பின் எப்போதாவது கவிதைகள் ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்கும் ஆர்வம் தங்கள் பதிவினால் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.. நன்றி.. வாழ்த்துக்கள்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com