tag:blogger.com,1999:blog-34103693.post4058008122626800256..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவுதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-34103693.post-38242917111999294742011-05-14T11:07:14.513-04:002011-05-14T11:07:14.513-04:00முட்டும் கண்ணீரைத் துடைக்கவும் தோணவில்லை.. ஹ்ம்ம்ம...முட்டும் கண்ணீரைத் துடைக்கவும் தோணவில்லை.. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்..:-(((*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-13591464796025964172009-05-29T06:51:39.819-04:002009-05-29T06:51:39.819-04:00பிரபாகரன் உயிரோடுதான் இருக்கின்றார்.
நமது உணர்ச்ச...பிரபாகரன் உயிரோடுதான் இருக்கின்றார்.<br /><br />நமது உணர்ச்ச்கிகளுக்காக, தலைவர் செய்மதிகளின் கழுகுப் பார்வைகளுக்கு இலக்காகிவிட வேண்டுகின்றீர்களா ? என்ன ?<br /><br />இன்றும் (29/05/2009) வைகோவும், பழ.நெடுமாறனும் சொல்வதைக் கேளுங்கள் - "ஒரு இனத்தினையே துரோகம் செய்யக்கூடிய துரோகி நான் இல்லை, தலைவர் உயிரோடு இருக்கின்றார்"புரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-32902674071818015132009-05-27T21:53:29.569-04:002009-05-27T21:53:29.569-04:00நன்று தமிழ்நதி.
நீங்கள் அஞ்சலி செலுத்த வேண்டியதில...நன்று தமிழ்நதி.<br /><br />நீங்கள் அஞ்சலி செலுத்த வேண்டியதில்லை.<br /><br />நீங்கள் மட்டுமன்றி உங்களைப் போல் நிலைப்பாடுடையவர்களும் இதைச் செய்யக்கூடாதென்பது எனதும் என்னைப் போன்றவர்களதும் நிலைப்பாடு.<br /><br />உந்த உள்ளுணர்வோடு என்ன கிளிசறின் கண்ணீரா விடப்போகிறீர்கள்? அதைவிடக் கேவலப்படுத்த ஏதுமிருக்க முடியாது. அது, தலைவன் தப்பியோடி ஒளிந்திருக்கிறான் என்ற கருத்தாக்கத்தைவிடவும் கொடுமையானது.<br /><br />களத்தில் மாண்டான் தலைவனென்று நம்புபவர்கள் மட்டும் தலைவணங்குவோம் வாருங்கள். மற்றவர்கள் மாவீரர் நாள் வரைப் பொறுத்திருங்கள்.<br /><br />தான் செத்து ஈழத்தமிழினத்தைச் சிதறடித்தான் தலைவன் என்று வரலாறு நிலைக்கட்டும்.<br />====================<br /><br />உள்ளுணர்வை நான் எப்போதும் மதிப்பவன். அது பெரும்பாலும் சரியானதையே சொல்லுமென்ற நம்பிக்கையை வலுவாகப் பெற்றிருப்பவன். <br /><br />நீங்கள் படைப்பாளியாகக் கதைக்காத பட்சத்தில் உங்கள் உள்ளுணர்வுக்கு எனது மரியாதை எப்போதுமுண்டு.<br />-------------------<br />இது தனியே தமிழ்நதிக்கான எதிர்வினையன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-56409356008470705332009-05-26T08:01:00.788-04:002009-05-26T08:01:00.788-04:00parabharan should be alive or he will be alive but...parabharan should be alive or he will be alive but singlavan politiceans and government but singalavan will suffer for their activity. am sure there wil be a great reavenge against the singlavans. though prabhaharan is efficent and brave he did not attace singlavan cithizeens. but rouge singlavan government attacaked poore innecent tamil citizeens.i think singlavan govrnment will get the title {worlds awful creatchure}.<br /> i hope that again in many different ways lot of prabaharan will develop aganinst singalavan domination they will face many attack againvignathkumarhttps://www.blogger.com/profile/08646592023297766093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-28342606308909801612009-05-26T05:25:15.290-04:002009-05-26T05:25:15.290-04:00எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே
15:52, Posted by ht...எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே<br /><br />15:52, Posted by http://mullaimann.blogspot.com<br />எங்களுக்காய் வாழ்ந்து<br />எங்களுக்காய் மாய்ந்த எழுமதியே !<br />வணங்குகிறோம்.<br /><br />சூரியனாய்ப் பிறப்பெடுத்துச்<br />சுதந்திரத்தின் காவலனாய்<br />கால்நூற்றாண்டையும் கடந்து<br />காடும் மேடும் களவாழ்வுமென<br />வாழ்வையும் உங்கள் வம்சத்தையும்<br />எங்களுக்காய்த் தந்தவரே !<br /><br />காலப் பெருநதியில் காணாமல் போகாமல்<br />ஓயாமல் பாய்ந்த எரிமலையே !<br />காலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள்<br />அவதாரனின் துயரில் அனைத்தும்<br />அசையவோ அடுத்து நகரவோ இயலாமல்<br />போட்டு வைத்த பிணங்கள் போல்<br />காலம் காப்பிடமின்றி அலைகிறது.<br /><br />வஞ்சம் கொன்றது<br />எங்கள் வாழ்வைத் தின்றது<br />இதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க<br />என்ன மர்மம் உள்ளதோ…..?<br />வாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல்<br />இறுதிவரை போராடியே மாண்டீர் அல்லது மறைந்தீர்.<br /><br />மரணம் மாவீரரை வென்றதில்லை – மாவீரம்<br />மரணத்தை வென்ற பெரும் வல்லமை படைத்ததை உங்கள்<br />வழிவந்த தோழதோழியரைக் களப்பலியெடுத்த<br />துரோகங்களே சாட்சியாக<br />`´சாவெனில் சமர் வாழ்வெனில் போரென்று`´<br />போனவர்கள் முடிவுகளில் கண்டோம்.<br /><br />கடைசி நிமிட வேண்டுகையும்<br />காப்பாற்றுகிறோம் என்றவரின் கழுத்தறுப்பும்<br />ஓடிய காலப்பெருங்கடலை இடையறுத்துத் தடைவிழுத்தித்<br />தமிழரின் விதியறுத்து வென்றதாய் விழாக்காணும்<br />கொலைஞர்கள் இன்று போகட்டும்.<br />எல்லாளன் பின்னர் எழுந்த கதிரவன் உங்கள் பின்<br />எழுந்த எரிமலைகள் உள்ளார்கள் என்பதை<br />உறுதியுடன் நம்புகிறோம்.<br /><br />உலகம் இதையெல்லாம் ஒதுக்கிவிட முடியாத<br />உண்மைகள் புரியப்படும் ஒருநாளில்<br />எல்லாம் ஒளிர்வு பெறும் முடிவு வரும்.<br />அந்நாள் வரையிலும் அமைதியுடனிருப்போம்.<br /><br />நன்றியென்றுங்கள் கொடையை<br />மூன்றெழுத்துக்குள் முடக்கமாட்டோம்.<br />நாளையெங்கள் சந்ததிக்கு<br />நீங்களே முன்னோடி<br />முகவரி எல்லாம் நீங்களே….,<br />எங்கள் மூச்சுள்ள வரையுமுங்கள்<br />முகமே எங்களுக்கு விடிவெள்ளி.<br /><br />நீங்கள் விரும்பிய தேசம்<br />நீங்கள் விரும்பிய விஞ்ஞானம்<br />உங்கள்விருப்பான எல்லாம் கொண்டு<br />எங்கள் வம்சம் எழுந்து வரும்<br />உங்கள் புதல்வர்களாய் புதல்விகளாய்…..,<br /><br />எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே<br />எங்களால் இயன்றது<br />இன்று ஒரு நினைவிருத்தல்<br />இதைவிட ஒன்றுமேயில்லையிப்போது எங்களிடம்.<br />நாங்கள் விட்ட கண்ணீரால்<br />நிறைந்திருக்கும் நந்திக்கடல் சோம்பல் முறித்து எழும்<br />சோகம் துடைத்து வரும் நன்நாளில்<br />உங்கள் கனவுகளை நினைவாக்கி எழுந்து வருவோம்.<br />26.05.09சாந்திhttp://mullaimann.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-30720157338407447432009-05-26T05:23:23.762-04:002009-05-26T05:23:23.762-04:00எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு இரகசியமாக ஒரு பொய்...எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு இரகசியமாக ஒரு பொய்யையேனும் சொல்லுங்கள்.<br /><br />“தலைவர் உயிருடன் இருக்கிறார்” <br /><br />தோழி தமிழ்நதி,<br />பொய் சொல்ல வேண்டாம் யாருமே ஆளாளுக்கு அறிக்கைவிட்டு அந்த மாபெரும் சுடரை அணைக்காமல் விடுவார்களேயானால் நிம்மதிதான்.<br /><br />தான் வளர்த்த போர்க் குழந்தைகளுக்கெல்லாம் இறுதி மரியாதையை எத்தனை சிறப்பாக செய்து முடித்த எங்கள் சூரியனை நாம் ஒரு அநாதைபோல விட்டுவிடுகிறோமா என்ற துயரம் இந்த வாழ்வை ஏன் வாழ்கிறோம் என எண்ண வைக்கிறது.<br /><br />உயிருடன் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையாகக் கூட இருக்கட்டும். ஆனாலும் இப்போது இல்லையெனப்படும் எங்கள் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடனை செய்ய தடைகள் விலகி நின்று வழிதருதலே சிறந்தது என்பது என் எண்ணம். <br /><br />உரியவன் இல்லாட்டில் ஒரு முளம் கட்டையென்ற எங்கள் ஊர்ப்பழமொழியை இப்போதைய அறிக்கைகள் மெய்யாக்குவது புரிகிறதா...?<br /><br />தோழமையுடன் சாந்திசாந்திhttp://mullaimann.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-81227009740417488882009-05-26T02:49:19.515-04:002009-05-26T02:49:19.515-04:00தமிழ், நம் தலைவர் இருக்கிறார். உண்மையை வெகு நாள்கள...தமிழ், நம் தலைவர் இருக்கிறார். உண்மையை வெகு நாள்கள் மறைத்து வைக்க முடியாது. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ ராஜபக்சே எனும் கொடுங்கோலனின் அழிவு வெகு சீக்கிரம் நிகழும். நம்பிக்கையின் வேரினைப் பற்றியிருப்போம், எல்லா சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டு இலங்கையில் தமிழ் ஈழம் மலரும்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-69171601315716485742009-05-26T02:31:15.800-04:002009-05-26T02:31:15.800-04:00பதிவை படித்து நெடுநேரம் வெறித்து பார்த்தபடி அமர்ந்...பதிவை படித்து நெடுநேரம் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன் தமிழ்நதி! இது வெறுங்கனவாகவே இருந்திருந்துவிடக் கூடாதாவென்று எண்ணியபடி!! கண்களில் நீர் திரையிட சொல்கிறேன் தமிழ்நதி...“தலைவர் உயிருடன் இருக்கிறார்” !!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-53404790709291116562009-05-26T00:48:52.310-04:002009-05-26T00:48:52.310-04:00தமிழ்நதி,
நானும் இப்படித்தான், பைத்தியக்காரி ஆகி ...தமிழ்நதி,<br /><br />நானும் இப்படித்தான், பைத்தியக்காரி ஆகி விடுவேனோ என்று குழம்பினேன்.<br />மூளையின் நரம்பொன்று வெடித்துச் சிதிறி விடுமோ எனப் பயமாக இருந்தது. <br /><br />இதே கேள்வி என்னிடமும்<br /><I>தொலைக்காட்சியைப் பார்க்குந்தோறும் நெஞ்சு கொதித்தது. எத்தனையோ பேரின் உயிராயிருந்தவன், ஒரு அநாதையைப்போல நந்திக்கடலோரத்தில் எவனோ தன்னுடலைப் புரட்டிப் பார்க்கக் கொடுத்துவிட்டுச் செத்துப்போவதென்பது நம்பமுடியாததாக இருந்தது</I>இன்னும் மனது அமைதியடையவில்லை.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15404778625727551692009-05-26T00:29:34.455-04:002009-05-26T00:29:34.455-04:00கதிர்,
உலகில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் நிலை...கதிர்,<br /><br />உலகில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் நிலை அன்று அதுவாகவே இருந்திருக்கிறது. அதுவொரு கரி நாள். தற்காலிகமாகவேனும் நம்பிக்கை செத்த நாள். இப்போதும் நிலை ஒன்றும் மாறிவிடவில்லை. புண்ணுக்குக் கட்டுப்போட்டிருக்கிறோம். அது உள்ளுக்குள் இருந்து வலித்துக்கொண்டுதான் இருக்கிறது கதிர்.<br /><br />அனானி நண்பரே,<br /><br />உங்கள் கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் விடையில்லை. நான் மிகச் சாதாரணள். ஒரு ஆதர்ச நாயகனைப் பார்த்துப் பார்த்துப் பிரமித்தவள். விடுதலைப் புலிகள் பெரிய பின்னடைவைச் சந்தித்துவிட்டார்கள்; விடுதலைப் போராட்டம் பல்லாண்டுகள் பின்தள்ளப்பட்டுவிட்டது. தோற்றாலும் வீரர்கள் வீரர்களே என்பதில் ஐயப்பட ஒன்றுமில்லை. வஞ்சகத்தாலும், முண்டுகொடுப்புகளாலும் வென்றாலும் பேரினவாதம் தோற்றதாகவே நாம் பொருள்கொள்கிறோம்.<br /><br />தலைவரைப் பற்றி... யார் என்ன அறிவித்தல் விடுத்தாலும், அவர் உயிருடன் இருக்கிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது. கட்டுரையை எழுதும்போது அந்நேரத்து மனோநிலையில் 'உயிருடன் இருக்கிறார் என்று சொல்லுங்கள்'என்று இறைஞ்சினேன். ஆனால், யாரும் சொல்லாமலே உள்ளுணர்வு சொல்கிறது.. அவர் உயிருடன் இருக்கிறார் என்று. ஆனால், சில காரணங்களுக்காக அவர் 'மறைக்க'ப்படும்போது, உலகத்தின் கண்களுக்காக என்றாலும் அவருக்குரிய மரியாதை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 'போய் வாருங்கள்... காத்திருக்கிறோம்'என்று துயர் ததும்பக் கையசைத்திருக்க வேண்டும். அந்தப் பேரெழுச்சியின் வழியாக அந்த மகத்தான மனிதருக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும்.<br /><br />நேற்று ஒரு நண்பர் கதைத்தார்... "இது தோல்வியன்று... ஒரு வகையில் வெற்றிதான். விடுதலைப் புலிகள் பலத்தோடு இருந்து பல்லாண்டுகாலம் போராடினார்கள். உலகம் திரும்பிப் பார்க்கவில்லை. இன்னும் இருபதாண்டுகள் போராடியிருந்தாலும் நிலைமை இப்படியே நீடித்திருக்கும். ஒரு தோல்வியின்போது உலகம் விழித்துக்கொண்டிருக்கிறது... 'தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும்; அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்'என்பதை, பல்லாயிரம் மக்களை, போராளிகளைப் பலியிட்டு உணர்த்தியிருக்கிறது விடுதலைப் போராட்டம். இதைத் தோல்வி என்று கொள்ளாதீர்கள். இது அரசியல் ரீதியான வெற்றி'என்றார். அதுதான் உண்மையோ...? இராணுவப் பாதையிலிருந்து அரசியல் பாதைக்கு உலகளாவிய ரீதியில் போராட்டம் திசைதிரும்பியிருப்பது வெற்றிதானே இல்லையா?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-52043916465816618532009-05-25T23:58:52.666-04:002009-05-25T23:58:52.666-04:00இதென்ன கோதாரி?
நீங்கள் கேட்கும் பொய்யைத்தான் ஈழத்த...இதென்ன கோதாரி?<br />நீங்கள் கேட்கும் பொய்யைத்தான் ஈழத்தவர்களுக்காகக் குரல்தரவல்லவர்ககளாகத் தம்மை நினைத்துக் கொள்ளும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?<br /><br />போதாததுக்கு நக்கீரன், விகடன் துணையிருக்கிறதே? இன்னும் வேண்டுமானால் அறிவழகனோ கிறிவழகனோ அனாமதேயப் பேர்வழிகள் இருக்கிறார்கள்.<br /><br />இவர்களை நீங்கள் நம்பவில்லையா?<br />___________________<br /><br />பத்மநாதனை விடவும் தொடர்புகளுள்ள கொம்பன்கள் சொல்கிறார்கள் நம்புங்கள்.<br /><br />பத்மநாதனை விடவும் குரல்தரவல்ல அருகதையுடையவர்கள் சொல்கிறார்கள் நம்புங்கள்.<br /><br />எங்களைவிடவும் தலைவரை நேசித்த, அறிந்து வைத்திருந்த அனாமதேயங்கள் அறிக்கை விடுகிறார்கள்.<br /><br />நம்புங்கள்!<br />----------------------<br /><br />ஒன்றைக் கவனித்தீர்களா?<br />புலியெதிர்ப்புக் கும்பலும் தலைவரை நேசிப்பதாகவும் அவரின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப் படுத்த முண்டியடிப்போரும் இன்று ஒரேபுள்ளியில் வந்து இணைந்திருக்கிறார்கள். இரு தரப்பும் துரோகியென்று கைகாட்டுகின்றன ஒரேதிசை நோக்கி.<br /><br />'மோட்டு'ச் சிங்களவனுக்கு இதைவிட வேறென்ன வெற்றி வேண்டும்?<br /><br />--------------------------<br />தலைவனை இவ்வளவுதூரம் கேவலப்படுத்த இந்தப் புலி அடிவருடிகளால் முடிகிறதென்பது நம்ப முடியாமலிருக்கிறது. தலைவனைப் புகழ்வதாக நினைத்துக்கொண்டு இகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நக்கீரன், விகடனை விட்டுவிடுவோம். அவர்கள் எப்போதும் வியாபாரிகள். ஆனால் தன்னலமற்று ஈழ ஆதரவைக் காலகாலமாக தமது நிலைப்பாடாகக் கொண்டிருப்பவர்கள் செய்கிற குளறுபடிகள் தாங்க முடியவில்லை.<br /><br />பாவம் மக்கள் கூட்டம். தாம் உயிருக்குயிராய் நேசித்த தலைவனுக்கு வணக்கம் செல்லுத்தக்கூட அவர்களால் முடியவில்லை.<br /><br />சரி, உங்கள் கருத்தென்று ஒன்றிருக்கட்டும். தலைவரால் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வரும் அறிவித்தலை நடைமுறைப்படுத்த என்ன தயக்கம்? இவரில்லாவிட்டால் வேறெவரின் அறிவித்தலை ஏற்பீர்கள்? அனாமதேயமாக இணையத்தளங்களுக்கு அறிக்கை விடுபவர்களையா? அல்லது அனாமதேயங்கள் சொன்னதென்று செய்தியெழுதும் ஊடகங்கள் சொல்வதையா? இதற்குள் 'புலிகளின் அதிகாபூர்வச் செய்திகளை வெளியிடும்' என்ற அடைமொழியோடு சில செய்தித் தளங்கள் அடையாளங்காணப்பட்டு, அவை சொன்னால் நம்புவோம் என்ற நிலைமை.<br /><br />தனக்கு இழவு கொண்டாட தலைவன் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் பேரெழுச்சியொன்றை ஏற்படுத்தியிருக்க வேண்டிய சந்தர்ப்பமொன்று கைநழுவிப் போகிறது.<br />=========================<br />பிரபாகரன் என்ற அடையாளத்தின் பெறுமதியே அச்சக்தி கடைசிவரைக் களமாடியது என்பதுதான். <br /><br />-மடலனுப்பியவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-9109430747608481542009-05-25T23:58:34.682-04:002009-05-25T23:58:34.682-04:00தமிழ் நதி உங்களுக்குள் தோன்றிய உணர்வு குழப்பமும், ...தமிழ் நதி உங்களுக்குள் தோன்றிய உணர்வு குழப்பமும், கொந்தளிப்பும் அந்த 19ம் தேதி எனக்குள்ளும் நிகழ்ந்தது. அந்த நாள் முழுதும் பைத்தியம் பிடித்து போல் இருந்தது. பிரபாகரனின் மரணம் குறித்து யார் விவாதித்தாலும் ஒரு பெருங்கோபம் புயலாய் மனதில் வீசியது. (இயலாமையின் வெளிப்பாடும் கூட) தமிழினத்தை உலகம் வஞ்சித்திருக்கிறது. இந்தப் பாவத்தை உலகமும், இந்திய மீடியாக்கலும் எந்த நீர் ஊற்றி கழுவப்போகிறதுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com