tag:blogger.com,1999:blog-34103693.post8332655811271618547..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: என் விமர்சனம்தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-34103693.post-4539712989432614332008-03-18T14:46:00.000-04:002008-03-18T14:46:00.000-04:00'பிறகு பார்த்துக்கொள்ளலாம்'என்றிராமல் நேரமெடுத்து...'பிறகு பார்த்துக்கொள்ளலாம்'என்றிராமல் நேரமெடுத்து பின்னூட்டமிடும் நண்பர் சூரியாவுக்கு நன்றி. இப்படி யாராவது வந்து சொல்லிவிட்டுப் போனால்தான் நாங்களும் உயிரோடிருப்பதாக நினைத்துக்கொள்ள முடியும். 'அசைவற்றிருந்தால் எடுத்துக்கொண்டுபோய் புதைத்துவிடுகிற உலகமிது'என்றொருவர் சொன்னார்.<BR/><BR/>"விமர்சன பாராட்டுக்களை பிரதிபலனாய் எதிர்பார்ப்பது நட்புக்கு அழகல்லன்னு <BR/>அருமையாக சொல்லியிருக்கிங்க..."-ரசிகன்.<BR/>ஆம் ரசிகன். நமக்கு வெகுவாகப் பரிச்சயமானவர்களிடம் நமது கவிதைகளைக் கொடுத்து 'எப்படியிருக்கிறது?'என்று கேட்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகவே தோன்றவாரம்பித்திருக்கிறது. கல்யாண்ஜி 'சூரியனின் கீழ்'என்ற தனது கவிதையில் இப்படிச் சொல்லியிருப்பார்.<BR/><BR/>"ஒருவகைத் திணிப்பு ஒருவகை அத்துமீறல்<BR/>ஒருவகை நிர்ப்பந்தம் ஒருவகை வன்முறை<BR/>ஒருவகை அபோதம் ஒருவகைச் சுரண்டல்<BR/>ஒருவகைச் சுற்றுச்சூழல் கேடு<BR/>எதையும் உண்டாக்காமல்<BR/>என்னுடைய கவிதைகளைப் பலமுறை<BR/>நான் மட்டும் <BR/>வாசிக்கிறேன் தனிமையில்.<BR/>அப்புறம் விருப்பமுள்ள <BR/>எல்லோரும் வாசிக்கட்டும் என்று<BR/>சூரியனின் கீழ் வைத்துவிடுகிறேன்."<BR/><BR/>சரிதானே...<BR/><BR/>வருகைக்கு நன்றி நாகப்பன்!குடி என்பது நோயைக் காட்டிலும் கொடிதென நானும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். குடும்பத்தையும் தன்னையும் அழித்துக்கொண்டு தெருவில் திரிபவர்களைத்தான் தினந்தோறும் பார்க்கிறோமே <BR/><BR/>"எங்கள் பின்நவீனத்துவ கவிஞர்களை நக்கலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்! :-)"-லக்கிலுக்<BR/><BR/>கண்டியுங்க... கண்டியுங்க... இப்பல்லாம் தமிழ்மணத்தில் கண்டனப்பதிவுகள்தானே அதிகமாக வருகின்றன:) படைப்பூக்கத்திற்குப் பதிலாக தோள்களை விடைத்துக்கொண்டு சண்டைக்கு நிற்பவர்கள் பெருகிவிட்டார்களே... கவனிக்கவில்லையா...:)(முன்ஜாமீனாக ஸ்மைலி போட்டுவிடவேண்டும். சண்டையிட எனக்கு நேரமில்லை. மனசுமில்லை)<BR/><BR/>கிங்!'பைசாச ஓவியங்கள்'என்பது இங்கு நேரடியான பொருளில் வராது. நேர்மையான விமர்சனம் என்பது குறைந்துவருகிறது; அவரவர் சார்புநிலைகளுக்கேற்ப அது எழுதப்படுகிறது என்றேன். கருமையான திரையில் வரையப்படும் அமானுஷ்யத் தோற்றங்கள் அன்றேல் பிசாசுகளின் உருவங்களை ஒத்தனவாயிருக்கின்றன அவ்வகை விமர்சனங்கள் என்று சொல்லவந்தேன். பொருளற்றது என்றும் பொருள் கொள்ளலாம்.<BR/>"விமர்சனங்கள் இருந்தால்தான் நாம் வாசிக்கப்படுகிறோம் ஆனால் விமர்சனங்களை நாம் வாசிக்கக்கூடாது..."-கிங்<BR/><BR/>ஒரு அறமற்ற விமர்சனத்தைக் காட்டிலும் விமர்சிக்கப்படாதிருப்பதே மேல் அல்லவா? விமர்சனங்களால் வாசிக்கப்படுகிறோம் என்பது ஓரளவு உண்மைதான். ஆனால்,விமர்சனங்களற்ற தரமான படைப்பை காலம் அழித்துவிடுகிறதா என்ன? யோசிக்கவும். நீங்கள் கூறியதை நானும் யோசிக்கிறேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-78201062577349610382008-03-17T17:44:00.000-04:002008-03-17T17:44:00.000-04:00//திருப்தியோடிரு!நாம் கவிதை எழுதுகிறோம்அன்றேல் அவ்...//திருப்தியோடிரு!<BR/>நாம் கவிதை எழுதுகிறோம்<BR/>அன்றேல் அவ்வாறு நம்புகிறோம்.//<BR/><BR/>விமர்சனங்கள் இருந்தால்தான் நாம் வாசிக்கப்படுகிறோம் ஆனால் விமர்சனங்களை நாம் வாசிக்கக்கூடாது...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-65589859452548514422008-03-17T17:21:00.000-04:002008-03-17T17:21:00.000-04:00"பைசாச ஓவியங்கள்"பைசாச என்ற சொல்லுக்கு என்ன அர்த்த..."பைசாச ஓவியங்கள்"<BR/><BR/>பைசாச என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-81080253217259791642008-03-14T03:40:00.000-04:002008-03-14T03:40:00.000-04:00/மதுச்சாலைகளில்கண்ணாடிக்குவளைகளை உயர்த்தி உரசிய ஒல.../மதுச்சாலைகளில்<BR/>கண்ணாடிக்குவளைகளை உயர்த்தி உரசிய ஒலி<BR/>சில நாட்களில் மீள்ரீங்கரிக்கிறது<BR/>சஞ்சிகையொன்றில். <BR/>//<BR/><BR/>எங்கள் பின்நவீனத்துவ கவிஞர்களை நக்கலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்! :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-62805701523542112122008-03-13T08:45:00.000-04:002008-03-13T08:45:00.000-04:00தோழிக்கு எனது வணக்கம்,அம்மாவின் புடவையை கூட அடகு ...தோழிக்கு எனது வணக்கம்,<BR/>அம்மாவின் புடவையை கூட அடகு வைத்து குடித்த அப்பா, சாராயம் மட்டுமே அதிகபடியான ஞாபகத்தில்.... உயிர் விட்ட அவரை ஞாபக படுத்தியது கவிதையின் கடைசி சில வரிகள். அதிக பட்ச வித்தியாசம் இல்லை , மகன் தீக்குச்சிகளை அடுக்கி கொண்டிருக்கிறான் , நான் கவிதை எழுதி கொண்டிருக்கிறேன் ---விகிரமாத்தியனையும் நினைவு படுத்தியது கவிதை......சொல்லி கொள்ள நிறைய இருக்கிறது. .........உள் அர்த்தம் வேறு என்றாலும் வெளிப்பாடு அருமை. காத்திரமான பதிவு. நல்ல படைப்பு, வாழ்த்துகள்.<BR/><BR/><BR/>ஈர மண்ணின் நேசத்துடன்,<BR/>ஆர்.நாகப்பன்.ரா.நாகப்பன்https://www.blogger.com/profile/17990228597667220470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-44300972275146736642008-03-11T14:11:00.000-04:002008-03-11T14:11:00.000-04:00யார் நம் படைப்பை மிகச்சரியாக புரிந்துக்கொண்டு விமர...யார் நம் படைப்பை மிகச்சரியாக புரிந்துக்கொண்டு விமர்சிக்க முடியும்? நம்மைத் தவிர?.. <BR/>விமர்சன பாராட்டுக்களை பிரதிபலனாய் எதிர்பார்ப்பது நட்புக்கு அழகல்லன்னு <BR/>அருமையாக சொல்லியிருக்கிங்க...<BR/>(நான் புரிஞ்சுக்கிட்டது இம்புட்டுதான்.திட்டாதிங்க :)) )ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-8451685267974244132008-03-09T20:48:00.000-04:002008-03-09T20:48:00.000-04:00இதுகுக்குத்தான் நான் அடிச்சடிச்சு மீண்டும் சொல்கிற...இதுகுக்குத்தான் நான் அடிச்சடிச்சு மீண்டும் சொல்கிறேன் படைப்பு முக்கியம். விமர்சனம் அல்ல. விமர்சனத்தை பக்குவமாக கையாளும் காலம் இன்னமும் கைகூடவில்லை தோழிழிழிழிழிழி.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-6373680489651437432008-03-09T08:12:00.000-04:002008-03-09T08:12:00.000-04:00மஞ்சூர் ராசா!இது மிக எளிய கவிதையல்லவா (இதுவும் என்...மஞ்சூர் ராசா!இது மிக எளிய கவிதையல்லவா (இதுவும் என்று வந்திருக்க வேண்டுமோ) அல்லது வேறு 'புரிதலை'ச் சொன்னீர்களா?<BR/><BR/>கென்!உங்கள் கவிதைகள் பார்த்தபிறகு இந்த நகைப்பானுக்கு வேறு அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது:)<BR/><BR/>"இவ்வாறே நானும்.<BR/>உங்கள் விமர்சனத்திற்கு ஆட்பட விரும்புகிறேன் :("-நவன்<BR/><BR/>ஆட்பட உங்கள் கவிதைகள் குறைந்தவையோ ஆட்கொள்ள நானொரு மகாகவியோ அல்ல. சுந்தர ராமசாமி அவர்களின் பாணியில் சொன்னால், 'அவரவர் கவிதையை அவரவர் எழுதவேண்டியதுதான்'. கவிதை எழுதுகிறோம் என்பதில் திருப்திகொண்டால் போதும்.<BR/><BR/>"கவிதையும் கவிஞனும் மன மொழி பேசுபவராயிற்றே.. இவற்றில் கயமைத்தனத்தோடான ஒப்பீடு எதற்கு..."<BR/>என்று கேட்டிருந்தீர்கள் கிருத்திகா. தரவரிசையிடும் சட்டாம்பிள்ளைத்தனங்களால் எரிச்சலுற்று எழுதியது. எல்லாக் கவிதைகளிலும் ஏதோவொரு அழகு இருக்கத்தான் செய்கிறது. தூக்கிப்பிடிப்பதற்கும் தாக்கித் தறிப்பதற்கும் பின்னால் கவிதையின் தரமல்லாத உப காரணங்களும் இருப்பதை நொந்து எழுதியது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-10079378067598397852008-03-09T04:14:00.000-04:002008-03-09T04:14:00.000-04:00கவிதையும் கவிஞனும் மன மொழி பேசுபவராயிற்றே.. இவற்றி...கவிதையும் கவிஞனும் மன மொழி பேசுபவராயிற்றே.. இவற்றில் கயமைத்தனத்தோடான ஒப்பீடு எதற்கு...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-64880979779905878142008-03-08T11:03:00.000-05:002008-03-08T11:03:00.000-05:00//திருப்தியோடிரு!நாம் கவிதை எழுதுகிறோம்அன்றேல் அவ்...//திருப்தியோடிரு!<BR/>நாம் கவிதை எழுதுகிறோம்<BR/>அன்றேல் அவ்வாறு நம்புகிறோம்.//<BR/><BR/>இவ்வாறே நானும்.<BR/>உங்கள் விமர்சனத்திற்கு ஆட்பட விரும்புகிறேன் :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-67116100783498511752008-03-08T04:07:00.000-05:002008-03-08T04:07:00.000-05:00"ஒரு மதுக்குப்பி வாங்கவற்றியுலர்ந்த மனைவியின் மூக்..."ஒரு மதுக்குப்பி வாங்க<BR/>வற்றியுலர்ந்த மனைவியின் மூக்குத்தியை <BR/>அடகுவைத்துக் கையெழுத்திடுகிறவனைவிட<BR/>திருப்தியோடிரு!<BR/>நாம் கவிதை எழுதுகிறோம்<BR/>அன்றேல் அவ்வாறு நம்புகிறோம்."<BR/><BR/><BR/>:)))))))))))))Kenhttps://www.blogger.com/profile/12891237063918911943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-24668440807686711032008-03-08T03:20:00.000-05:002008-03-08T03:20:00.000-05:00கொஞ்சம் புரிகிறது.கொஞ்சம் புரிகிறது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com