12.27.2010

காலச்சுவடு பதிப்பகம் மூலம் எனது புத்தகம்


அன்பு நண்பர்களுக்கு,


“ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்“ என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் வழியாக ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை ஆறு மணிக்கு அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கில் வெளியிட்டு வைக்கப்படுகிறது. அதனோடு கூட மேலும் 8 நுால்களின் வெளியீடும் இடம்பெறவிருக்கிறது. பிரபஞ்சன், ஹென்றி திபேன், பால் சக்கரியா, சுகுமாரன், ச.பாலமுருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, சதானந்த மேனன், வாஸந்தி, ஞாநி ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.

நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
தமிழ்நதி