2.21.2009

மாபெரும் ஒன்றுகூடல் - பெப்ரவரி 22 (இன்று - ஞாயிற்றுக்கிழமை)

அன்பு நண்பர்களுக்கு,

வலைப்பூவில் பிரசுரிக்க அனுப்பப்பட்டதில் எழுதியிருப்பது போல எல்லாவற்றைக் குறித்தும் பேசியாயிற்று. இருந்தாலும், ஒன்றுமே பேசப்படாததுபோல ஒரு வெளி நமக்கு முன் விழுந்துகிடக்கிறது. மக்கள் எழுச்சியால் மட்டுமே இதை நிரவ முடியும். நம்மால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது என்பது உண்மை. ஆனால், ஏதேனும் செய்யாமல் கைகளைக் கட்டிக்கொண்டிருப்பதும் மனிதம் என்ற சொல்லுக்கே இழுக்கானதல்லவா? வாருங்கள்... இந்தப் பேரணியில் ஒன்றிணைந்து நடப்போம். ஏதாவது நடக்கிறதா பார்ப்போம். அதிகாரத்தின் மெளனத்தை மக்களின் இரைச்சல் அசைக்கிறதா பார்க்கலாம்.

----------------------------------

மாபெரும் ஒன்றுகூடல்
சென்னை பெப்ரவரி 22 - 2009 மெரினா கடற்கரை போர்நினைவகம் முதல் காந்திசிலை வரை
- இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்

அன்புள்ள நண்பர்களுக்கு,

நிறைய பேசியாயிற்று
நிறைய விவாதித்தாயிற்று

மனிதாபிமானம் பற்றி
தற்கொடைப்பற்றி
தற்கொலையின் முட்டாள்தனம் பற்றி
தற்கொலையின் தியாகம் பற்றி

ராஜீவ் காந்தியின் கொலைப்பற்றி
அதன் துன்பியல் பற்றி
அதன் மர்மங்கள் பற்றி
இந்திய தேச இறையாண்மைப்பற்றி

தடைசெய்யப்பட்ட இயங்கங்கள் பற்றி
அவைகளைப்பற்றிபேசுவதின் சட்ட சிக்கல் பற்றி
அந்த தடையின் நியாயங்கள் பற்றி

அந்த தடையை உடைப்பதைப் பற்றி


இனவெறுப்புகள் பற்றி
மனிதக்கேடயங்கள் பற்றி
பாதுகாப்பு வலையம் பற்றி
Cocentration Camp பற்றி

இந்திய தேசிய ஒருமைப்பாடு பற்றி
தமிழ்தேசிய பிரிவினைவாதம் பற்றி
இந்தியனாய் இனைவோம் பற்றி
தமிழனாய் எழுவோம் பற்றி

பயங்கரவாதிகள் பற்றி
விடுதலைப்போராளிகள் பற்றி
மதவெறிகளைப்பற்றி
எல்லாம் கடந்த மனிதநேயம் பற்றி

எல்லாம் கடந்து ஒன்று மட்டும் நிச்சயம்
அங்கே பிணங்கள் குவிவதை யாரும் மறுப்பதற்கில்லை.
இன அழித்தல் நடப்பதை யாரும் அறியாமலில்லை
பிணங்களின் மேல் ஒன்றும் நடக்கவில்லை என்று சத்தியம் செய்ய நாம் தயாராயில்லை

நேற்று(17- பெப்ரவரி-2009) கொல்லப்பட்ட 104 (50 குழந்தைகள் உள்பட) உயிர்களுக்காய்
இந்த புத்தாண்டில் மட்டும் இறந்த 1700 உயிர்களுக்காய்
4000 மேற்பட்ட படுகாயப்பட்டவர்களுக்காய்
இதுவரை 60 ஆண்டுகளின் , இறந்த 70 000 அப்பாவி தமிழர்களுக்காய்

ஒன்று கூடுவோம் ஒரே குரலாய் ஒரே குறிக்கோளோடு

‘போர் நிறுத்தம் வேண்டும் . இனஅழித்தலை நிறுத்த வேண்டும்’


எந்த அரசியல் உள்நோக்கமுமில்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை
பொதுமக்கள் இனைந்து பொதுமக்களால் நடத்தப்படும் இந்த மாபெரும் அமைதி நடைக்கு ஒன்று கூடுவோம்

இடம்: போர் நினைவகம் தொடங்கி காந்தி சிலை வரை, மெரினா கடற்கரை, சென்னை
நாள் : 22- பெப்ரவரி – 2009 (ஞாயிறு)
நேரம் : மாலை 4 மணி

குடும்பத்தோடு வாருங்கள்.
இந்த அமைதி நடையில் நடக்கும் ஒவ்வொருவராலும் அங்கே ஓர் உயிர் பிழைக்கும்.
2 ½ இலட்சம் அப்பாவித்தமிழர்கள் உங்களை கையேந்தி நிற்கிறார்கள்.


இதுவரை வர அழைப்பு விடப்பட்டவர்கள் மற்றும் சம்மதித்திருப்பவர்கள்

1.இந்த மதம் சார்ந்த அமைப்புகள் (வாழும்கலை (ART OF LIVING),), இன்னும் பிற அமைப்புகள்
2. முஸ்லீம் மதம் சார்ந்த மதத்தலைவர்கள் மற்றும் அமைப்பினர்
3. எல்லா கிருஸ்து அமைப்புகள்
4. புத்த பிக்குகள்
5. திராவிடர் கழகம் (கட்சிகள் அல்ல)
6. மருத்துவர்கள் அமைப்புகள்
6. பொறியாளர் சங்கம்
7. வணிகர் சங்கங்கள்
8.ஆட்டோ ஓட்டுனர்கள்
9. அரசுத்துறை ஊழியர்கள்
10. அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு
11. விளையாட்டுதுறை சார்ந்த சங்கங்கள்
12 .கலைத்துறையினர் (நடிகர் சங்கம், துனை நடிகர் சங்கம், இயங்குனர்கள் இன்னபிற)
13.தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
14. வணிக நிறுவனங்கள்
15. அனைத்து மீனவ அமைப்புகள்
16. பத்திரிக்கையாளர்கள்
17. பதிவர்கள்
இன்ன பிற அமைப்புகளும்…

ஓர் இனம் அழியும் பொழுது நடுநிலைமை என்பது மனிதத்தன்மை அல்ல
ஒன்று படுவோம் இன அழித்தலைத் தடுப்போம்

இலக்குவண்
இனஅழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்
www.indiansagainstgenocide.org

2 comments:

நாமக்கல் சிபி said...

நிச்சயமாக பங்கேற்போம்!

ஆண்ட்ரு சுபாசு said...

நிச்சயமாக படை எடுப்போம்